தட்கல் டிக்கெட்டுகளுக்கு ஏர் இந்தியா கொடுக்கும் அதிரடி ஆஃபர்… இனி ஜாலியா பறக்கலாம்!

 

தட்கல் டிக்கெட்டுகளுக்கு ஏர் இந்தியா கொடுக்கும் அதிரடி ஆஃபர்… இனி ஜாலியா பறக்கலாம்!

மத்திய அரசின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கி வரும் ஏர் இந்தியா விமான நிறுவனம், கடைசி 3 மணி நேரத்தில் டிக்கெட் புக் செய்யும் டிக்கெட்களுக்கு தள்ளுபடியை அறிவித்துள்ளது. 

மத்திய அரசின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கி வரும் ஏர் இந்தியா விமான நிறுவனம், கடைசி 3 மணி நேரத்தில் டிக்கெட் புக் செய்யும் டிக்கெட்களுக்கு தள்ளுபடியை அறிவித்துள்ளது. 

பொதுவாக விமான  டிக்கெட் எவ்வளவு நாட்களுக்கு முன்பாக எடுத்துவிடுகிறோமோ அவ்வளவுக்கு அவ்வளது விலைக்குறைவாக கிடைப்பதுண்டு, ஆனால் தற்போது அதற்கு மாற்றாக கடைசி 3 மணி நேரத்தில் டிக்கெட் புக் செய்தால் அதிரடி ஆஃபர் என ஏர் இந்தியா நிறுவனம் அறிவித்துள்ளது. அவசரமாக பயணிக்கக்கூடிய சூழல்வரும் பயணிகளுக்கு இந்த சலுகை உதவிகரமாக இருக்கும்.

இதுதொடர்பாக அறிவிப்பு வெளியிட்டுள்ள ஏர் இந்தியா, உள்நாட்டு விமானச் சேவையில் கடைசி 3 மணி நேரத்தில் பயணிகள் டிக்கெட் புக் செய்தால் 40% தள்ளுபடி வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. வழக்கமாக கடைசி நிமிட புக்கிங்கில் உண்மையான விலையை விட 40% அதிக கட்டணம் வசூலிக்கப்படும். ஆனால் தற்போது இந்த விதி தலைகீழாக மாற்றப்பட்டுள்ளது . 

இதுகுறித்து விமான நிறுவன செய்தித் தொடர்பாளர் கூறுகையில், கடைசி நிமிட பயண முடிவு என்பது மிகவும் அவசரமான, அத்தியாவசியமானதாகவும் இருக்கும். எனவே தான் இன்று நடைபெற்ற ஆய்வுக்கூட்டத்தில் இந்த திட்டம் அறிவிக்கப்பட்டது. டிக்கெட்களை கவுண்டர்களிலோ அல்லது. மொபை ஆப் மற்றும் இணையதளங்களின் வாயிலாக பெற்றுக்கொள்ளலாம்.