தடையை மீறி இயங்கிய ஆலை..விஷவாயு தாக்கி இருவர் உயிரிழப்பு!

 

தடையை மீறி இயங்கிய ஆலை..விஷவாயு தாக்கி இருவர் உயிரிழப்பு!

அந்த தொட்டியில் அடைப்பு இருந்ததால் அதனை சுத்தம் செய்யும் பணியில் கார்த்தி என்னும் தொழிலாளி ஈடுபட்டிருந்துள்ளார்.

சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே சதாசிவபுரத்தில் ஜவ்வரிசி ஆலை இயங்கி வந்தது. ஊர் முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப் பட்டிருப்பினும், ரவி என்பவருக்கு சொந்தமான இந்த ஆலை மட்டும் ரகசியமாக இயங்கி வந்துள்ளது. இந்த ஆலையில் மரவள்ளிக் கிழங்கின் கழிவுகள் மூலம் எரிவாயு அமைக்கும் தொட்டி இருந்துள்ளது. இந்நிலையில் அந்த தொட்டியில் அடைப்பு இருந்ததால் அதனை சுத்தம் செய்யும் பணியில் கார்த்தி என்னும் தொழிலாளி ஈடுபட்டிருந்துள்ளார். 

ttn

அப்போது அவரை விஷவாயு தாக்கியுள்ளது. இதனை கண்ட அதே ஆலையில் வேலை பார்த்து வரும் கார்த்தியின் சித்தப்பா ஆறுமுகம், அவரை காப்பாற்ற சென்றுள்ளார். அச்சமயம் அவரையும் விஷவாயு தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் இரண்டு பேருமே சம்பவ இடத்தில் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். தகவல் அறிந்து வந்த ஆத்தூர் போலீசார், இச்சம்பவம் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தடையை மீறி இயங்கிய அந்த ஆலையில் இருவர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.