தங்க நகை பட்டறையில் கொத்தடிமையாக வேலைப்பார்த்த 62 சிறுவர்கள் மீட்பு!

 

தங்க நகை பட்டறையில் கொத்தடிமையாக வேலைப்பார்த்த 62 சிறுவர்கள் மீட்பு!

சென்னை வால்டாக்ஸ் சாலையில் தங்க நகை பட்டறையில் கொத்தடிமையாக வேலைப்பார்த்த 62 சிறுவர்கள் மீட்கப்பட்டனர். 

சென்னை வால்டாக்ஸ் சாலையில் தங்க நகை பட்டறையில் கொத்தடிமையாக வேலைப்பார்த்த 62 சிறுவர்கள் மீட்கப்பட்டனர். 

சவுகார் பேட்டையில் இயங்கிவந்த  நகை பட்டறையில் கொத்தடிமைகளாக வேலை பார்த்து வந்த 62 சிறுவர்கள் மீட்கப்பட்டனர்.  இந்த சிறுவர்கள் அனைவரும் 18 வயதிற்கு குறைவானவர்கள் என்பதும் தெரியவந்துள்ளது. இந்த 62 சிறுவர்களும் மேற்கு வங்க மாநிலத்தை சேர்ந்தவர்கள் என்பது கண்டறியப்பட்டுள்ளது. 

சிறுவர்கள்

மீட்கப்பட்ட அனைத்து சிறுவர்களும் காசிமேட்டில் உள்ள அரசு காப்பகத்தில் வைக்கப்பட்டுள்ளனர். இந்த சிறுவர்களின் கைகள் வெடித்த நிலையில் இருக்கும் புகைப்படங்களும் வெளியாகியுள்ளன.