தங்கையுடன் ரக்ஷா பந்தன் கொண்டாட சென்ற இளைஞர்: மாஞ்சா கயிறு அறுத்து பலியான பரிதாபம்!

 

தங்கையுடன்  ரக்ஷா பந்தன் கொண்டாட சென்ற இளைஞர்: மாஞ்சா கயிறு அறுத்து  பலியான பரிதாபம்!

தங்கையுடன் ரக்ஷா பந்தன் கொண்டாடச் சென்ற அண்ணன்  பட்டத்தின் மாஞ்சா கயிறு கழுத்தை அறுத்து உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

தங்கையுடன்  ரக்ஷா பந்தன் கொண்டாட சென்ற இளைஞர்: மாஞ்சா கயிறு அறுத்து  பலியான பரிதாபம்!

புதுடெல்லி: தங்கையுடன் ரக்ஷா பந்தன் கொண்டாடச் சென்ற அண்ணன்  பட்டத்தின் மாஞ்சா கயிறு கழுத்தை அறுத்து உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

டெல்லியைச் சேர்ந்தவர் மாணவ் ஷர்மா. பொறியியல் பட்டதாரியான இவர், தனது தங்கையுடன்  ரக்ஷா பந்தன் பண்டிகையைக் கொண்டாட டெல்லியின் ரோகினி பகுதிக்கு இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளனர். அப்போது அவரது கழுத்தை  மாஞ்சா கயிறு அறுத்துள்ளது. இதனால் அவரது கழுத்திலிருந்து ரத்தம் வழிய ஆரம்பித்துள்ளது. இதையடுத்து பதறிப்போன அவரது தங்கை மாணவ்வை அழைத்துக்  கொண்டு மருத்துவமனை சென்றுள்ளார். ஆனால் அவர் பாதியிலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார். 

இந்த விவகாரம் குறித்துக் கூறியுள்ள ஏடிஜிபி ராஜேந்தர் சிங் சாகர், மாணவ் தனது தங்கையும் பாலத்தின் மேல் செல்லும் போது  பட்டம் ஒன்றின் மாஞ்சா கயிறு ஒன்று அவரது கழுத்தை அறுத்துள்ளது. இதனால் அவர் இறந்துவிட்டார். மாணவ்வின் பிரேத பரிசோதனை அறிக்கையில், மாஞ்சா கயிறு  கழுத்தை அறுத்ததில் அவரின் உணவு மற்றும் மூச்சு குழாய் தொடர்பு துண்டிக்கப்பட்டு அவர்  இறந்ததாக அறிக்கை வந்துள்ளது. அதனால் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறோம் ‘ என்றார். இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை  ஏற்படுத்தியுள்ளது.