‘தங்கத்தமிழ்ச்செல்வனை டெபாசிட் இழக்கவைப்பார் டி.டி.வி.தினகரன்’ – கள்ளக்கணக்கு சொல்லும் ஓ.பி.எஸ்.ஆர்

 

‘தங்கத்தமிழ்ச்செல்வனை டெபாசிட் இழக்கவைப்பார் டி.டி.வி.தினகரன்’ – கள்ளக்கணக்கு சொல்லும் ஓ.பி.எஸ்.ஆர்

தங்கத் தமிழ்ச்செல்வனெல்லாம் எனக்கு ஒரு பொருட்டே அல்ல. பொறுத்திருந்து பாருங்கள் அவரது கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் தினகரனே தேர்தலில் அவரை டெபாசிட் இழக்கவைப்பார்

தேனி:  ‘தங்கத் தமிழ்ச்செல்வனெல்லாம் எனக்கு ஒரு பொருட்டே அல்ல. பொறுத்திருந்து பாருங்கள் அவரது கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் தினகரனே தேர்தலில் அவரை டெபாசிட் இழக்கவைப்பார்’ என்று ‘குண்டு ஒண்ணு வச்சிருக்கேன்’ என்பது போலப் பேசுகிறார் ஓ.பி.எஸ்.சின் வாரிசும் தேனி பாராளுமன்றத் தொகுதி வேட்பாளருமான ரவீந்திரநாத்.

ஓ.பி.எஸ். செலவழிக்கும் 1000 கோடி

raveendranath

தி.மு.க.கூட்டணி சார்பில் ஈ.வி.கே.எஸ்.,அ.ம.மு.க.வில் தங்கத் தமிழ்ச்செல்வன், அ.தி.மு.க.கூட்டணியில் ரவீந்திரநாத் என செம ஹாட்டான தொகுதியாக மாறியிருக்கிறது தேனி. மகனை இத்தொகுதியில் ஜெயிக்க வைக்க ஓ.பி.எஸ். செலவழிக்கும் 1000 கோடி, ஓ.பி.எஸ். மகனை எடப்பாடியே ஆட்களை வைத்துத் தோற்கடிப்பார், தங்கத் தமிழ்ச் செல்வன், ஈ.வி.கே.எஸ். ஆகியோருக்கு அடுத்தபடியாக மூன்றாவது இடம்தான் பிடிப்பார் ரவீந்திரநாத்’ என்பது போன்ற ஏகப்பட்ட தலைப்புச் செய்திகளால் தீப்பிடித்துப் போயிருக்கிறது தேனி தொகுதி.

சிதறும் அதிமுக ஓட்டுகள்?

ops

இந்நிலையில் தனது வெற்றிவாய்ப்பு குறித்து மார்தட்டிக்கொள்ள ஆரம்பித்திருக்கும் ரவீந்திரநாத்,” எனக்கு எதிராக வாக்குகள் பிரிகின்றன என்று கிளப்பிவிடுகிறார்கள். இங்கு அ.தி.மு.க.வின் வாக்குகள் அத்தனையும் சிந்தாமல் சிதறாமல் அப்படியே இருக்கின்றன.

ஓவரா பிலிம் சுற்றும் ரவீந்திரநாத்

ops son

கழகத்துக்கு தொடர்ந்து துரோகம் செய்துவருபவர் தங்கத் தமிழ்ச் செல்வன். அவர் எந்த முகத்தை வைத்துக்கொண்டு மக்களிடம் வாக்குக் கேட்க வருகிறாரென்றே புரியவில்லை.தினகரனும் கூட அம்மாவால் கட்சியை விட்டு நீக்கப்பட்டவர்தான் என்பதைத் தொகுதி மக்கள் நன்கு அறிவார்கள்.இதே தினகரன் கட்சியை விட்டு நீக்கப்படக் காரணமாக இருந்தவர் சாட்சாத் தங்கத் தமிழ்ச் செல்வனேதான் என்பது தினகரனுக்கும் தெரியும். எனவே தங்கத் தமிழ்ச்செல்வன் டெபாசிட் இழக்கவேண்டிய வேலையை தினகரனே பார்த்துக்கொள்வார்” என்கிறார் ஓ.பி.எஸ் அதாவது ஓவரா பிலிம் சுற்றும் ரவீந்திரநாத்.

 

இதையும் வாசிக்க: சிறுமிக்கு மயக்க மருந்து கொடுத்து கூட்டு பாலியல் வன்கொடுமை: வீட்டை விட்டு வெளியேறியதால் நடந்த கொடூரம்!