தக்கலை முருகன் கோயிலில் காவலர்கள் காவடி எடுத்து வினோத வழிபாடு ! 

 

தக்கலை முருகன் கோயிலில் காவலர்கள் காவடி எடுத்து வினோத வழிபாடு ! 

கார்த்திகை மாத கடைசி வெள்ளிக்கிழமையை முன்னிட்டு குமாரகோயில் முருகன் கோயிலுக்கு காவடி ஊர்வலம் நடைபெற்றது . இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

நாகர்கோயில் :

திருவிதாங்கூர் மன்னர் காலத்தில் இருந்து கார்த்திகை மாத கடைசி வெள்ளிக்கிழமையில் தக்கலை அருகில் உள்ள குமாரகோயில் முருகன் கோயிலில் குற்றங்கள் குறைந்து மக்கள் நிம்மதியாக வாழ காவல்துறை சார்பிலும், மழை வளம் பெருகி விவசாயம் சிறக்க பொதுப்பணித்துறை சார்பிலும் மேலும் விவசாயிகள் நன்றி தெரிவிக்கும் விதமாகவும் காவடி எடுத்து வழிபடுவது வழக்கம்.

thuckalay

அதன்படி  இந்தாண்டிற்கான கார்த்திகை மாத கடைசி வெள்ளிக்கிழமையான நேற்று குமாரகோயிலுக்கு காவல்துறை அதிகாரிகள் மற்றும் பொது பணித்துறையினர் சார்பில் காவடி ஊர்வலம் நடைபெற்றது.

அது போல் பல்வேறு ஊர்களில் இருந்தும் பக்தர்கள் காவடி எடுத்து வந்தனர்.தக்கலை போலீஸ் நிலையம் சார்பில் யானை மீது பால்குடம் மற்றும் 2 புஷ்ப காவடிகளும் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டது.

போலீஸ் நிலையத்தில் தொடங்கிய இந்த ஊர்வலத்தில் பத்மநாபபுரம் மாஜிஸ்திரேட்டு முத்துராமன், தக்கலை போலீஸ் துணை சூப்பிரண்டு கார்த்திகேயன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

thuckalay

பொதுப்பணித்துறை சார்பில் புஷ்ப காவடி எடுத்து செல்லப்பட்டது. விழாவில் உதவி பொறியாளர் கதிரவன், செயற்பொறியாளர் மற்றும் பொதுப்பணித்துறை ஊழியர்கள் பலர் கலந்து கொண்டனர்.

மேலும் சுற்று வட்டாரங்களை சேர்ந்த திரளான பக்தர்கள் காவடி எடுத்து குமாரகோயில் முருகனை வழிபாடு செய்தனர்.