டோனியை விமர்சிப்பது நியாயமற்றது ; கபில்தேப் காட்டம் !!

 

டோனியை விமர்சிப்பது நியாயமற்றது ; கபில்தேப் காட்டம் !!

உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியின் அறை இருதி ஆட்டங்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கும் இந்நிலையில் இந்திய அணியில் முன்னால் கேப்டன் டோனி சில விமர்சனங்களுக்கு உள்ளாகி இருக்கிறார். அதாவது, டோனி தற்போது மந்தமாக விளையாடுவதாக சில முன்னால் வீரர்கள் அவரை விமர்சித்துள்ளனர்.

உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியின் அறை இருதி ஆட்டங்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கும் இந்நிலையில் இந்திய அணியில் முன்னால் கேப்டன் டோனி சில விமர்சனங்களுக்கு உள்ளாகி இருக்கிறார். அதாவது, டோனி தற்போது மந்தமாக விளையாடுவதாக சில முன்னால் வீரர்கள் அவரை விமர்சித்துள்ளனர். இதில் குறிப்பாக ஆப்கானிஸ்தான் மற்றும் இங்கிலாந்துக்கு எதிரான போட்டிகளில் அவர் சரியாக விளையாடவில்லை என விமர்சனம் கிளம்பியுள்ளது.

dhoni

இந்நிலையில், டோனிக்கு எதிரான இந்த விமர்சனத்திற்கு, இந்திய அணியின் முன்னால் கேப்டன் கபில்தேவ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது, டோனியை  விமர்சிப்பது நியாயமற்ற ஒரு செயலாகும். இந்திய கிரிக்கெட்டின் அனைத்து காலகட்டத்திலும் சிறந்த வீரர்களில் டோனியும் ஒருவர். அவர் தனது பணியை சிறப்பாக செய்து வருகிறார். அவர் நல்ல நிலையில் இருப்பது அணிக்கு மிகவும் முக்கியமான ஒன்றாகும். அவர் சிறந்த விக்கெட் கீப்பரும் ஆவார். இந்திய அணியின் கேப்டன் கோலி ஆக்ரோஷமாக இருக்கும் நேரங்களில் டோனி அவருக்கு உதவியாக இருந்து செயல்படுகிறார் என கபில்தேவ் தெரிவித்துள்ளார்.