டொனால்டு டிரம்ப்பிற்கு விருந்து: ‘ஆஸ்கர் நாயகன்’ ஏ.ஆர். ரஹ்மான் பங்கேற்பு!

 

டொனால்டு டிரம்ப்பிற்கு விருந்து: ‘ஆஸ்கர் நாயகன்’ ஏ.ஆர். ரஹ்மான் பங்கேற்பு!

 நமஸ்தே டிரம்ப் நிகழ்ச்சியில் பங்கேற்று பேசிய அவர், ஆக்ராவில் உள்ள தாஜ்மகாலை பார்வையிட்டார். 

குஜராத் மாநிலம்  அகமதாபாத்தில் கட்டப்பட்டுள்ள உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் மைதானத்தை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் நேற்று முன்தினம் திறந்து வைத்தார்.  மனைவி மெலனியா, மகள் மற்றும் மருமகனுடன் குஜராத் வந்த டிரம்ப்  காந்தியின் சபர்மதி ஆசிரமத்திற்குச் சென்று  பார்வையிட்டார். பின்னர்  சர்தார் வல்லபாய் படேல் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற  நமஸ்தே டிரம்ப் நிகழ்ச்சியில் பங்கேற்று பேசிய அவர், ஆக்ராவில் உள்ள தாஜ்மகாலை பார்வையிட்டார். 

ttn

இரண்டு நாள் பயணமான இதில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் சார்பில் டொனால்ட் டிரம்புக்கு நேற்றிரவு  விருந்து ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

ttn

இதில் பிரதமர் மோடி, துணைக் குடியரசுத் தலைவர் வெங்கைய நாயுடு, மத்திய அமைச்சர்கள், கர்நாடக முதல்வர் எடியூரப்பா, தெலங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவ் உள்ளிட்ட பல்வேறு மாநில முதல்வர்கள்  கலந்து கொண்டனர்.

ttn

மேலும் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான், பிரபல சமையல் கலைஞர் விகாஷ் கண்ணா ஆகியோரும் இதில் பங்கேற்றனர்.இதை  தொடர்ந்து அதிபர் டிரம்ப் நேற்றிரவு டெல்லியில் இருந்து மீண்டும் அமெரிக்கா புறப்பட்டுச் சென்றது குறிப்பிடத்தக்கது.