‘டைலாக்’என்ற மூன்றெழுத்தை  ‘வைரல்’ என்ற மூன்றெழுத்து ஆக்கிரமித்தது! வைரலாகும் மூன்றெழுத்து வசனம்!!

 

‘டைலாக்’என்ற மூன்றெழுத்தை  ‘வைரல்’ என்ற மூன்றெழுத்து ஆக்கிரமித்தது! வைரலாகும் மூன்றெழுத்து வசனம்!!

கடந்த 2 மாதங்களுக்கு முன் #PrayForNesamani எப்படி சம்பந்தமே இல்லாமல் ட்ரெண்டானதோ அதே போல தற்போது மூன்றெழுத்து என்ற ஹேஷ்டேக் ட்ரெண்டாகி வருகிறது. 

‘டைலாக்’என்ற மூன்றெழுத்தை  ‘வைரல்’ என்ற மூன்றெழுத்து ஆக்கிரமித்தது! வைரலாகும் மூன்றெழுத்து வசனம்!!

கடந்த 2 மாதங்களுக்கு முன் #PrayForNesamani எப்படி சம்பந்தமே இல்லாமல் ட்ரெண்டானதோ அதே போல தற்போது மூன்றெழுத்து என்ற ஹேஷ்டேக் ட்ரெண்டாகி வருகிறது. 

 

 

இயக்குநர் வெங்கட் பிரபு, 1968ம் ஆண்டு வெளியான மூன்றெழுத்து என்ற திரைப்படத்தின் ஒரு காட்சியில் அத்தனை நடிகர்களும் மூன்றெழுத்து என்ற சொல்லை வைத்தே பேசிய அருமையான வசனத்தை உடைய வீடியோவை அவரது  ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். மேலும் அந்த வீடியோவுடன் “வியக்க வைக்கும் வசனம்… ’யப்பா’… இதுவும் மூன்றெழுத்து… யாருப்பா அது வசனகர்த்தா ?” எனக் குறிப்பிட்டிருந்தார்.

இதையடுத்து இந்த வீடியோவும், மூன்றெழுத்து ஹேஷ்டேக்கும் தீயை பரவ தொடங்கியது. அனைவரும் தங்களது கற்பனையில் தோன்றும் மூன்றெழுத்து வசனங்களை கோர்வையாய் தொடுத்து பதிவிட்டு ட்ரெண்ட் செய்துவருகின்றனர். 


இயக்குநர் டி.ஆர்.ராமண்ணா, 1968 ஆம் ஆண்டு இயக்கிய படம்தான் மூன்றெழுத்து. இது  ‘க’, ‘மு’, ‘தி’ என்னும் மூன்றெழுத்துகளைக் ரகசியக் குறிப்பாகக் கொண்ட ஒரு க்ரைம் த்ரில்லர் படம். இப்படத்தில் ரவிச்சந்திரன், ஜெயலலிதா, நாகேஷ், ஷீலா, அசோகன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படத்திற்கு வசனம் டி.என்.பாலு எழுதியிருந்தார்.

காலங்கள் கடந்தாலும் இந்த படத்தின் வசனம் இன்று இளசுகளின் மனதில் இந்த புதிய வைரல் மூலம் உதயமாகியுள்ளது.