“டேய் விடைத்தாளை காமிக்கலேன்னா வெட்டிடுவேன்”- புத்தியோடு வராமல் கத்தியோடு வந்தார் -பரீட்சையில் பதட்டம்
அகமதாபாத்தில் இப்போது பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு நடந்து வருகிறது .இந்த பொதுத்தேர்வில் நன்றாக படிக்கும் மாணவன் அருகே சுமாராக படிக்கும் ஒரு மாணவன் அமர்ந்து தேர்வு எழுதினார்.
அகமதாபாத்தில் ஒரு பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் பக்கத்திலிருந்த மாணவனுக்கு விடைத்தாளை காமிக்காததால் அந்த மாணவனை கத்தியால் கொல்ல முயற்சித்த சம்பவம் நடந்துள்ளது .
அகமதாபாத்தில் இப்போது பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு நடந்து வருகிறது .இந்த பொதுத்தேர்வில் நன்றாக படிக்கும் மாணவன் அருகே சுமாராக படிக்கும் ஒரு மாணவன் அமர்ந்து தேர்வு எழுதினார். அப்போது இந்த சுமார் மாணவன் அந்த நன்றாக படிக்கும் மாணவனிடம் விடைத்தாளை காமிக்கும்படி கேட்டார். ஆனால் அந்த மாணவன் விடைத்தாளை காமிக்க மறுத்து, எக்ஸாம் சூப்பர்வைசரிடம் போட்டுக்கொடுத்துள்ளார். சூப்பர்வைசர் அந்த மாணவனை கண்டித்துள்ளார் இதனால் அந்த மாணவன் கடும் கோபத்துக்குள்ளானார்.
பிறகு எக்ஸாம் முடிந்து அந்த 17 வயது நன்றாக படிக்கும் மாணவன் ஒரு கோயில் அருகே நின்ற போது, காப்பியடிக்க முடியாமல் போன மாணவன் அங்கே வந்து ஒரு கத்தியை எடுத்து அவரை குத்த வந்துள்ளார். அதனால் பயந்த மாணவன் அங்கிருந்து ஓடி போய் தன்னுடைய தந்தையிடம் புகார் கூறினார். உடனே இதனால் கோபமுற்ற அவரின் தந்தை அருகிலுள்ள காவல்நிலையத்தில் சிறுவன் மீது புகாரளித்தார். போலிஸார் இதை மைனர் வழக்கின் அடிப்படையில் விசாரணை செய்து வருகின்றனர்.