“டேய் தகப்பா, சொத்து கொடு இலையென்றால் உயிரை விடு” தந்தையை கொன்ற பாசக்கார மகன் …

 

“டேய் தகப்பா, சொத்து கொடு இலையென்றால் உயிரை விடு” தந்தையை கொன்ற பாசக்கார மகன் …

உத்தரப்பிரதேச மாநிலம் பரேலியில் சொத்து தகராறு தொடர்பாக தனது தந்தையை கொலை செய்துவிட்டு  ஒருவர் தப்பி ஓடிவிட்டார். அந்த நபர் தன்னுடைய தந்தை  தூங்கிக் கொண்டிருந்தபோது துப்பாக்கியால் சுட்டுக் கொன்றார். 

உத்தரப்பிரதேச மாநிலம் பரேலியில் சொத்து தகராறு தொடர்பாக தனது தந்தையை கொலை செய்துவிட்டு  ஒருவர் தப்பி ஓடிவிட்டார். அந்த நபர் தன்னுடைய தந்தை  தூங்கிக் கொண்டிருந்தபோது துப்பாக்கியால் சுட்டுக் கொன்றார். 
உத்தரப்பிரதேச மாநிலம் பரேலியில் ஷெர் சிங் என்பவரிடம், அவரின் தந்தை  துர்ஜன் சிங் தன்னைத் துன்புறுத்தியதாக அவரது மனைவி கூறியதையடுத்து, ஷெர் சிங் மற்றும் அவரது தந்தை துர்ஜன் சிங் இடையே அடிக்கடி சண்டை வந்தது. மேலும் ஷெர் சிங் மற்றும் துர்ஜன் சிங் ஆகியோரிடையே சொத்து தகராறும் இருந்து வந்துள்ளது.
இதனால் ஞாயிற்றுக்கிழமை காலை, சம்பலில் உள்ள சண்டவுசியில் உள்ள வீட்டில் அவரின் தந்தை தூங்கிக் கொண்டிருந்தபோது ஷெர்சிங் தனது தந்தையை நோக்கி சுட்டதில் அவரின் தந்தை சம்பவ இடத்திலேயே இறந்தார். இந்த துப்பாக்கி சூட்டுக்கு பிறகு ஷெர்சிங் அந்த  வீட்டிலிருந்து தப்பி ஓடிவிட்டார்.

போலீசில் அவரின் மூத்த சகோதரர் அளித்த புகாரின் பேரில் நடந்த விசாரணையில் ஷெர் சிங் சொத்து பிரச்சினை காரணமாக தனது தந்தையை கொலை செய்ய முடிவெடுத்தார் என்பது தெரியவந்தது. “இந்த வழக்கின் அனைத்து கோணங்களையும் நாங்கள் விசாரித்து வருகிறோம், மேலும் தப்பி ஓடிய குற்றவாளியை கைது செய்ய நடவடிக்கை மேற்கொண்டு வருகிறோம்.”என போலிசார் கூறினர்.