டெல்லி மாநாட்டில் கலந்துகொண்ட ஆந்திராவை சேர்ந்த 43 பேருக்கு கொரோனா உறுதி!

 

டெல்லி மாநாட்டில் கலந்துகொண்ட ஆந்திராவை சேர்ந்த 43 பேருக்கு கொரோனா உறுதி!

கொரோனா வைரசால் பலியானோர்  எண்ணிக்கை 42 ஆயிரத்தை தாண்டியது. அதாவது 42,322 பேர் உயிரிழந்துள்ளனர். 

கொரோனா வைரஸ் தற்போது  199  நாடுகளில் பரவி அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. இந்த ஆபத்தான நோய்  தொற்றிலிருந்து  தப்பிக்க அனைத்து நாடுகளும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுத்து வருகின்றன.  இதுவரை உலகம் முழுவதும் 8 லட்சத்து 59 ஆயிரத்து 032 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். உலக அளவில் கொரோனா வைரசால் பலியானோர்  எண்ணிக்கை 42 ஆயிரத்தை தாண்டியது. அதாவது 42,322 பேர் உயிரிழந்துள்ளனர். 

ttn

அதேபோல் இந்தியாவில் கொரோனாவுக்கு இதுவரை 38 பேர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் ஆந்திராவில் மேலும் 43 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

ttn

இவர்கள் டெல்லி மாநாட்டில் கலந்துகொண்டது தெரியவந்துள்ளது. இதனால் ஆந்திராவில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 87 ஆக உயர்ந்துள்ளது. மேலும்  இந்தியாவில்  கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1637 ஆகியுள்ளது.