டெல்லியில் தமிழக மாணவி மர்ம மரணம்

 

டெல்லியில் தமிழக மாணவி மர்ம மரணம்

டெல்லியில் படித்து வந்த தமிழக மாணவி ஸ்ரீமதி மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார்.

டெல்லி: டெல்லியில் படித்து வந்த தமிழக மாணவி ஸ்ரீமதி மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார்.

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தை சேர்ந்தவர் ஸ்ரீமதி. இவர் டெல்லியில் இருக்கும் வஜ்ரம் பயிற்சி நிறுவனத்தில் இந்திய குடியுரிமை பணிக்கான தேர்விற்கு கடந்த 6 மாதங்களாக படித்து வந்தார். இந்நிலையில் விடுதியில் இருந்த ஸ்ரீமதியின் அறை நீண்ட நேரமாகியும் திறக்கவில்லை என்பதால் பதற்றமடைந்த சக மாணவிகள் காவல்துறையினரிடம் தகவல் கொடுத்தனர்.

இதனையடுத்து காவல்துறையினர் வந்து பார்த்தபோது ஸ்ரீமதி மர்மமான முறையில் அவரது அறையில் இறந்து கிடந்தார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஸ்ரீமதி தற்கொலை செய்துகொண்டாரா? இல்லை கொலை செய்யப்பட்டாரா? என்பது குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். மகள் உயிரிழந்ததை அறிந்த ஸ்ரீமதியின் பெற்றோர் டெல்லிக்கு விரைந்துள்ளனர். வெளி மாநிலத்திற்கு படிக்க செல்லும் தமிழக மாணவர், மாணவிகள் தற்கொலை செய்து கொள்வது தொடர்ந்து வருவது குறிப்பிடத்தக்கது.