டென்மார்க் ஓபன் பேட்மிண்டன்: இறுதி போட்டியில் சாய்னா அதிர்ச்சி தோல்வி

 

டென்மார்க் ஓபன் பேட்மிண்டன்: இறுதி போட்டியில் சாய்னா அதிர்ச்சி தோல்வி

டென்மார்க் ஓபன் பேட்மிண்டன் இறுதி போட்டியில் இந்தியாவின் சாய்னா நேவால் தோல்வியடைந்துள்ளார்

ஒடென்சி (டென்மார்க்): டென்மார்க் ஓபன் பேட்மிண்டன் இறுதி போட்டியில் இந்தியாவின் சாய்னா நேவால் தோல்வியடைந்துள்ளார்.

டென்மார்க் ஓபன் சர்வதேச பேட்மிண்டன் போட்டி ஒடென்சி நகரில் தொடங்கி நடைபெற்று வருகிறது. பெண்கள் ஒற்றையர் லீக் சுற்றுகள், காலிறுதி போட்டியில் வெற்றி பெற்று, அரையிறுதிக்கு முன்னேறிய இந்தியாவின் சாய்னா நேவால், உலக தரவரிசையில் 19-வது இடம் வகிக்கும் கிரிகோரியா மரீஸ்கா துன்ஜங்க் உடன் அரை இறுதியில் விளையாடினார். சுமார் 30 நிமிடங்கள் நீடித்த இந்த போட்டியில் 21-11, 21-12 என்ற செட் கணக்கில் கிரிகோரியாவை வீழ்த்திய சாய்னா இறுதி போட்டிக்கு முன்னேறினார்.

இந்நிலையில், உலக தரவரிசையில் 10-வது இடம் வகிக்கும் சாய்னா நேவால், தரவரிசையில் முதல் இடம் வகிக்கும் தாய் சூ யிங் உடன் இறுதிப் போட்டியில் மோதினார். முதல் செட்டை தாய் ஜூ யிங் வசப்படுத்த, 2-வது செட்டை சாய்னா கைப்பற்றினார். கடைசி செட்டில் தாய் ஜூ யிங் சாய்னாவை மிரள வைத்தார். சுமார் 52 நிமிடங்கள் நீடித்த இந்த ஆட்டத்தின் இறுதியில் தாய் ஜூ யிங் 21-13, 13-21, 21-6 என்ற செட் கணக்கில் சாய்னாவை வீழ்த்தி மகுடம் சூடினார்.