டெங்கு காய்ச்சல் பற்றிய விழிப்புணர்வு: பள்ளிகளுக்கு சுற்றறிக்கை.
டெங்கு காய்ச்சலை பற்றிய விழிப்புணர்வை மாணவர்களிடையே ஏற்படுத்த பள்ளிகளுக்கு சுற்றறிக்கை அனுப்ப இருக்கிறார் பள்ளி கல்வி இயக்குனர்.
டெங்கு காய்ச்சலை பற்றிய விழிப்புணர்வை மாணவர்களிடையே ஏற்படுத்த பள்ளிகளுக்கு சுற்றறிக்கை அனுப்ப இருக்கிறார் பள்ளி கல்வி இயக்குனர்.
வெகுவாக பரவி வரும் டெங்கு காய்ச்சலை தவிர்ப்பதற்காக டெங்கு காய்ச்சல் பற்றிய விழிப்புணர்வு மற்றும் தடுப்பதற்கான அறிவுரைகள் வெளியாகியுள்ளன. அதை அனைத்து பள்ளிகளுக்கும் அனுப்பப் போவதாக முடிவெடுத்துள்ளார். அதில், பள்ளியின் தலைமை ஆசிரியர்கள் மாணவர்களுக்கு டெங்கு காய்ச்சலை குறித்த அறிவுரைகள் வழங்க வேண்டும் என்றும், மாணவர்கள் தனது கைகளை எப்பொழுதும் தூய்மையாக வைத்திருக்க வேண்டும் என்றும் குறிப்பிட பட்டுள்ளது.
மேலும், பள்ளிகளின் வகுப்பறைகளிலோ அல்லது கழிவறைகளிலோ தண்ணீர் தேங்கி இருந்தால் உடனே மாணவர்கள் பள்ளிக்கு தெரிவிக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளர்.