டூப் போட்டு லைசென்ஸ் வாங்கினார் நடிகர் ராஜசேகர்: ஆந்திரா போலீஸ் அதிரடி!

 

டூப் போட்டு லைசென்ஸ் வாங்கினார் நடிகர் ராஜசேகர்: ஆந்திரா போலீஸ் அதிரடி!

ட்ராஃபிக் போலீஸ் கொடுத்திருக்கும் அறிக்கை டாக்ட்ட ராஜசேகர் மீது கடுமையான குற்றச்சாட்டுகளை வைத்திருக்கிறது

இதுதாண்டா போலீஸ் படத்தின் மூலம் பிரபலமானவர் நடிகர் டாக்டர் ராஜசேகர்.இவரது காரைப் பார்த்தாலே ஹைதராபாத் வாசிகள் அஞ்சுமளவுக்கு இவரது காரோட்டும் ஸ்டைல் இருக்குமாம்.இதுவரை மூன்று விபத்துகளைச் சந்தித்து இருக்கிறார் நடிகர் ராஜசேகர்.

ttn

கடந்த நவம்பர் 13-ம் தேதி அவர் ஏற்படுத்திய விபத்து அவரது கார் ஓட்டுனர் உரிமத்தையே பறித்து விட்டது.அன்றைய தினம்,ஒரு பெரிய எஸ்.யூ.வி ரகக் காரை ஓட்டிவந்த ராஜசேகர் சம்சாபாத் பெத்த கோல்கொண்டா அருகே சாலை நடுவில் இருந்த செண்ட்டர் மீடியனில் அசுர வேகத்தில்  மோதினார்.கார் உருண்டு மறுபுறம் வந்து கவிழ்ந்தது.ராஜ சேகர் சிறிய காயங்களுடன் அருகில் இருந்த தனியார் மருத்துவமனையில் அட்மிட் ஆகிவிட்டார்.

ttn

இந்த வழக்கை விசாரித்த சைபராபாத் ட்ராஃபிக் போலீஸ் கொடுத்திருக்கும் அறிக்கை டாக்ட்ட ராஜசேகர் மீது கடுமையான குற்றச்சாட்டுகளை வைத்திருக்கிறது.துணை ஆணையர் எஸ்.எம் விஜயகுமார் கொடுத்திருக்கும்  அந்த அறிக்கையில் ராஜசேகருக்கு கார் ஓட்டுவது பற்றிய அடிப்படை அறிவே இல்லை,அவர் ஏமாற்றியோ,அல்லது தனக்குப் பதில் வேறு ஆளை விட்டுத்தான் லைசென்ஸ் வாங்கி இருக்க வேண்டும். தவிர, சாலை விதிகள் பற்றியும் அவருக்கு எதுவுமே தெரியவில்லை. ஆகவே,அவரது ஓட்டுனர் உரிமத்தை திரும்பப் பெறவேண்டும் என்கிறது அந்த அறிக்கை.

இதை ஏற்றுக்கொண்ட ஆந்திர போக்குவரத்து ஆணையம் டாக்டர் ராஜசேகரின் லைசென்ஸை கேன்சல் செய்து விட்டது.பாவம் ‘ இதுதாண்டா போலீஸ்’ என்றவருக்கு ‘ இது தாண்டா லைசென்ஸ்’ என்று காட்டிவிட்டது ஆந்திர போலீஸ்!.