டீ கெட்டிலுக்குள் சிக்கிய குழந்தையின் தலை…போராடி மீட்ட தீயணைப்பு வீரர்கள்!
இந்தியாவில் குழந்தைகளின் தலைகள் பாத்திரத்திற்குள் சிக்கி கொள்வதாகச் செய்திகள் வெளியாகி நம்மை பதறவைத்தது
சமீப காலமாக இந்தியாவில் குழந்தைகளின் தலைகள் பாத்திரத்திற்குள் சிக்கி கொள்வதாகச் செய்திகள் வெளியாகி நம்மை பதறவைத்தது. தற்போது இதேபோல் சீனாவில் ஒரு சம்பவம் அரங்கேறியுள்ளது.
சீனாவின் ஹூனான் மாகாணத்திலுள்ள சாங்ஷா நகரில் 2 வயது குழந்தை ஒன்று விளையாடிக் கொண்டிருந்தது. அப்போது எதிர்பாராத விதமாக டீ பாத்திரத்திற்குள் குழந்தையின் தலை முழுவதுமாக சிக்கி கொண்டது. இதனால் குழந்தை வீறிட்டு அலற, சத்தம் கேட்டு வந்த குடும்பத்தினர் தாமதிக்காமல் தீயணைப்பு வீரர்களுக்குத் தகவல் கொடுத்தனர்.
இதைத் தொடர்ந்து சம்பவ இடத்துக்கு வந்த தீயணைப்பு வீரர்கள், குழந்தையை பத்திரமாக மீட்டனர். இதற்கான புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த செய்தியைப் பார்த்த பலரும் தீயணைப்பு வீரர்களுக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.