டி20 போட்டிகளில் இருந்து மிதாலிராஜ் ஓய்வு!
சர்வதேச டி20 போட்டிகளிலிருந்து ஓய்வு பெறப் போவதாக இந்திய பெண்கள் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மிதாலி ராஜ் அறிவித்துள்ளார்.
சர்வதேச டி20 போட்டிகளிலிருந்து ஓய்வு பெறப் போவதாக இந்திய பெண்கள் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மிதாலி ராஜ் அறிவித்துள்ளார்.
இந்திய பெண்கள் அணி 2006 ஆம் ஆண்டு முதன் முறையாக டி20 போட்டியில் விளையாடிய போது மிதாலி ராஜ் கேப்டனாக இருந்தார். இவர் இதுவரை 89 டி20 போட்டிகளில் விளையாடி 2364 ரன்கள் எடுத்துள்ளார். இதில் 17 அரைசதமும் அடங்கும்.
இந்நிலையில் மிதாலி ராஜ் பிசிசிஐ-க்கு அனுப்பிய கடிதத்தில், இந்திய அணிக்காக டி20 போட்டிகளில் கடந்த 2006 முதல் விளையாடி வருகிறேன். வரும் 2021 உலகக் கோப்பை ஒருநாள் தொடரில் முழுக் கவனம் செலுத்தவுள்ளேன். அதனால் டி20 போட்டிகளிலிருந்து ஓய்வு பெற விரும்புகிறேன். இந்தியாவுக்காக உலகக் கோப்பையை வெல்ல வேண்டும் என்ற கனவு எனக்குள் இன்னும் இருக்கிறது. இதுவரை பிசிசிஐ எனக்கு அளித்த ஒத்துழைப்புக்கு நன்றி’ என்று தெரிவித்துள்ளார்.