டி.ராஜேந்தரின் மகன் இஸ்லாம் மதத்திற்கு மாறியது ஏன் தெரியுமா?
இயக்குநர் டி.ராஜேந்தரின் இளைய மகன் குறளரசன் இஸ்லாம் மதத்திற்கு மாறியது குறித்து தகவல்கள் வெளியாகியுள்ளன.
சென்னை: இயக்குநர் டி.ராஜேந்தரின் இளைய மகன் குறளரசன் இஸ்லாம் மதத்திற்கு மாறியது பற்றி சில தகவல்கள் வெளியாகியுள்ளன.
இயக்குனர், இலட்சிய திமுகவின் தலைவர் என்று எப்போதும் பரபரப்புக்கு பஞ்சம் வைக்காதவர் டி.ஆர். எல்லா பேட்டிகளிலும் எம்மதமும் சம்மதம் என்று சொல்லும் டி.ஆர்.அந்த மதங்கள் குறித்த நல்ல விஷயங்களையும் அசராமல் அடுக்கு மொழியில் சொல்வதை நீங்கள் யூட்யூப்பில் பார்த்து ரசித்திருக்கலாம்.
டி.ஆரின் மனைவி உஷா கிஸ்தவ மதத்தைச் சார்ந்தவர்.அவரது மகள் இலக்கியா திருமணத்திற்கு முன்பு கிஸ்தவ மதத்திற்கு மாறினார்.மகன் சிம்பு,அப்பாவைப் போலவே தீவிர சிவ பக்தர்.அவ்வப்போது ‘பெரியார் குத்து’ ம் போட்டு ட்ரெண்டரடிப்பார்!
இப்படியான சூழலில்தான் குறளரசன் இஸ்லாம் மதத்திற்கு மாறியிருக்கிறார். இந்த திடீர் முடிவுக்கு என்ன காரணம்! அவருக்கு நெருக்கமானவர்களிடம் விசாரித்தோம்.
அண்ணன் சிம்பு நடிகர் ஆனதுபோல் தம்பி குறளுக்கு இசையமைப்பாளர் ஆகவேண்டும் என்பதுதான் வாழ்நாள் லட்சியம். அந்த வாய்ப்பை அண்ணன் சிம்பு ‘இது நம்ம ஆளு’ படத்தின் மூலம் கொடுத்தார். செல்ஃப் எடுக்கவில்லை.
இப்போது இந்தியில் ஒரு படமும், ஒன்றிரண்டு ஆல்பமும் இசையமைக்கிறார் குறளரசன். ஏ.ஆர்.ரஹ்மான், யுவன் சங்கர் ராஜா இருவரும் இஸ்லாம் மதம் மாறிய பிறகுதான் உச்சம் தொட்டார்கள் என்று நம்புகிறார் குறளரசன்! அதைத் தொடர்ந்தே இந்த மதமாற்றம்.
அப்படியாச்சும் ஆசை நிறைவேறட்டும். வாழ்த்துகள் தம்பி.