டி.என்.பி.எஸ்.சி முறைகேடு வழக்கில் அமைச்சருக்கும் தொடர்பா..! அதிர்ச்சி தகவல்கள்!!

 

டி.என்.பி.எஸ்.சி முறைகேடு வழக்கில் அமைச்சருக்கும் தொடர்பா..! அதிர்ச்சி தகவல்கள்!!

குரூப் -2,குரூப் -4 தேர்வுகளில் நடந்த முறைகேடுகள் தொடர்பாக தினந்தோறும் புதுப்புது செய்திகள் வந்துகொண்டு இருக்கின்றன. நேற்றுக் கைதான காவலர் சித்தாண்டிக்கும் ஓய்வு பெற்ற காவல் துறை உயர் அதிகாரிக்கும் இருந்த நெருக்கம் குறித்து விசாரித்து வருவதாகச் சொல்லும் போiலீசாரிடம் சில கேள்விகளுக்கு பதில் இல்லை.

குரூப் -2,குரூப் -4 தேர்வுகளில் நடந்த முறைகேடுகள் தொடர்பாக தினந்தோறும் புதுப்புது செய்திகள் வந்துகொண்டு இருக்கின்றன. நேற்றுக் கைதான காவலர் சித்தாண்டிக்கும் ஓய்வு பெற்ற காவல் துறை உயர் அதிகாரிக்கும் இருந்த நெருக்கம் குறித்து விசாரித்து வருவதாகச் சொல்லும் போiலீசாரிடம் சில கேள்விகளுக்கு பதில் இல்லை.

sithandi

இதுவரை குருப் 2 முறைகேட்டில் 9 பேரும், குரூப் 4 முறைகேட்டில் 14 பேரும் கைதாகி உள்ளனர். இன்னும் இந்த ஊழலின் மூளையாகச் செயல்பட்ட ஜெயக்குமார் என்கிற ஒருவர் கிடைத்து விட்டால் அதோடு வழக்கை முடித்து விடுவார்கள் என்று சொல்லப்படும் நிலையில் ஒரு புதிய அதிர்ச்சித் தகவல் வெளியாகி இருக்கிறது.

சி.பி.சி.ஐ.டி போலீசார் வழக்கில் தேடப்படும் குற்றவாளியாக அறிவித்து இருக்கும் ஜெயக்குமார் புகைப்படத்தை வெளியிட்டு இருக்கிறார்கள்.அதில் அவர் அடர்த்தியான தாடி மீசையுடன் காணப்படுகிறார்.ஜெயக்குமார் கேரளாவைச் சேர்ந்தவர், அவர் சபரிமலைக்கு மாலை போட்டு இருந்தபோது எடுக்கப் பட்ட படம் இது. ஜெயக்குமார் இப்போது தாடியுடன் இருக்க வாய்ப்பில்லை.இந்தப் படத்தை வைத்து அவரை அடையாளம் காண முடியாது என்று சொல்லப்படுகிறது. 

jayakumar-tnpsc

சாதரணமாக அரசு உயர் அதிகாரி போன்ற கெட்டப்பில்தான் ஜெயக்குமார் நடமாடுவார் என்கிறார்கள். இதற்கிடையே ஜெயக்குமார் மாறுவேடத்தில் வந்து தமிழக அமைச்சர் ஒருவரைச் சந்தித்ததாக ஒரு அதிர்ச்சி தகவல் வெளியாகி இருக்கிறது. அந்த சந்திப்புக்கு ஆதாரமாக சிசிடிவி பதிவுகளும் கிடைத்து இருக்கின்றனவாம்.அதனால் விரைவில் இந்த தமிழ் நாட்டு வியாபம் வழக்கின் முழுப்பரிமாணம் வெளிப்படும் என எதிர்பார்க்கப் படுகிறது.