டிப்பர் லாரி மோதி போக்குவரத்து உதவி ஆய்வாளர் மகன் பலி!

 

டிப்பர் லாரி மோதி போக்குவரத்து உதவி ஆய்வாளர் மகன் பலி!

 நிதிஷ்குமார் சென்னை அம்பத்தூரில் உள்ள தனியார் ஐடி நிறுவனத்தில் வேலைசெய்து வருகிறார். 

சென்னை புதுவண்ணாரப்பேட்டை காவலர் குடியிருப்பில் வசிப்பவர் சங்கர். ராயபுரம் போக்குவரத்து காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராக பணிபுரியும் இவருக்கு நிதிஷ்குமார் என்ற மகன் உள்ளார்.  நிதிஷ்குமார் சென்னை அம்பத்தூரில் உள்ள தனியார் ஐடி நிறுவனத்தில் வேலைசெய்து வருகிறார். 

yttn

இந்நிலையில் வழக்கம்போல் பணிமுடிந்து நிதிஷ்குமார் மற்றும் அவரின் நண்பர்கள் யாசர் அராஃபத்,   சிவா ஆகியோர்  தங்களது இரு சக்கர வாகனத்தில் வீடு திரும்பி கொண்டிருந்தனர். அப்போது இவர்கள் மாதவரம் கணக சத்திரம்  அருகே வந்த வேகமாக வந்த டிப்பர் லாரி ஒன்று  இவர்களின்  மீது மோதியுள்ளது.  இதை கண்ட அப்பகுதி மக்கள்,  3 பேரையும் மீட்டு சிகிச்சைக்காகச் சென்னை அரசு  ஸ்டான்லி  மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதில் நிதிஷ்குமார் சிகிச்சை பலனின்றி பலியானார்.  மற்ற இருவர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

 

ttn

இந்த விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்த மாதவரம் போக்குவரத்து புலனாய்வு போலீசார்  விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.