டிடிவி தினகரன் இயக்கம் போனியாகவில்லை: ஆர்.பி.உதயகுமார் தாக்கு

 

டிடிவி தினகரன் இயக்கம் போனியாகவில்லை: ஆர்.பி.உதயகுமார் தாக்கு

எங்களைப்பற்றியே டிடிவி தினகரன் பேசினார் என்றால் அவரது கட்சி போனியாகவில்லை என்று அர்த்தம் என அமைச்சர் ஆர்.பி உதயகுமார் கூறியுள்ளார்.

மதுரை: எங்களைப்பற்றியே டிடிவி தினகரன் பேசினார் என்றால் அவரது கட்சி போனியாகவில்லை என்று அர்த்தம் என அமைச்சர் ஆர்.பி உதயகுமார் கூறியுள்ளார்.

அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டதை அடுத்து அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் என்ற கட்சியை தொடங்கி நடத்தி வருகிறார் டிடிவி தினகரன். அதிமுகவை தற்போது கையில் வைத்திருப்பவர்களுக்கு எதிராக பலமாக களமாடி கொண்டிருந்த தினகரன் திடீரென தற்போது அமமுகவுடன் அதிமுக இணையும், அதிமுகவை அமமுக கைப்பற்றும் என கூறி வருகிறார்.

மேலும், வரும் நாடாளுமன்ற தேர்தலை எதிர்கொள்ளும் விதமாக ஓபிஎஸ்-ஈபிஎஸ்-டிடிவி ஆகிய மூவரையும் இணைக்கும் நடவடிக்கைகளில் பாஜக மேலிடம் இறங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆனால் இதற்கு சசிகலா ஒத்துக்கொள்வாரா? என்பன உள்ளிட்ட பல சந்தேகங்கள் அமமுகவினரிடம் எழுந்துள்ளது. 

இந்நிலையில் மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்,டிடிவி தினகரன் காட்டும் வித்தைகள் மக்கள் மத்தியில் எடுபடாது. அதிமுக மூலம் டிடிவி தினகரன் தன்னை அடையாளப்படுத்த நினைத்தார்; எங்களைப் பற்றியே டிடிவி பேசினார் என்றால் அவர்கள் இயக்கம் போனியாகவில்லை என்றுதான் அர்த்தம். டிடிவி தினகரனோடு நாங்கள் சேர்வதா இல்லை அவர் எங்களோடு சேர்வதா என்ற வாதமே தேவையற்றது என்றார்.