டிசம்பர் 26-ல் வங்கிகள் நாடு தழுவிய வேலைநிறுத்தம்

 

டிசம்பர் 26-ல் வங்கிகள் நாடு தழுவிய வேலைநிறுத்தம்

நாடு தழுவிய அளவில் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட போவதாக வங்கிகள் கூட்டமைப்பு அறிவித்துள்ளது

டெல்லி: நாடு தழுவிய அளவில் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட போவதாக வங்கிகள் கூட்டமைப்பு அறிவித்துள்ளது.

பேங்க் ஆஃப் பரோடா, தேனா வங்கி, விஜயா வங்கி ஆகிய வங்கிகளையும் ஒன்றாக இணைக்க கடந்த செப்டம்பர் மாதம் மத்திய அரசு ஒப்புதல் அளித்தது. இந்த 3 வங்கிகளில் தேனா வங்கியின் வாராக்கடன் 11 சதவீதமாகவும்,  பேங்க் ஆப் பரோடாவின் வாராக்கடன் 5.4 சதவீதமாகவும், விஜயா வங்கியின் வாராக்கடன் 4.10 சதவீதமும் இருக்கிறது.

இந்நிலையில், வங்கி இணைப்பை இதனை கண்டித்து வங்கிகள் அனைத்தும் வரும் 26-ம் தேதி வேலை நிறுத்தம் செய்ய முடிவு செய்துள்ளன. இந்த வேலை நிறுத்தத்தை வங்கி அதிகாரிகள் சங்கம், மற்றும் வங்கிகள் ஊழியர்களின் 9 சங்கங்களின் கூட்டமைப்பான வங்கி யூனியன்களின் ஒருங்கிணைந்த கூட்டமைப்பு நடத்துகிறது.

வங்கி யூனியன் ஒருங்கிணைந்த கூட்டமைப்பில் இருக்கும் அனைத்து யூனியன்களும் இந்த வேலைநிறுத்தப் போராட்டத்தில் பங்கேற்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.