டிக் டாக் செயலியால் காதலில் விழுந்த 13 வயது மாணவி! அதன்பின் நிகழ்ந்த விபரீதம்

 

டிக் டாக் செயலியால் காதலில் விழுந்த 13 வயது மாணவி! அதன்பின் நிகழ்ந்த விபரீதம்

சென்னை சேர்ந்த 13 வயது மாணவி டிக்டாக் செயலியால் இளைஞர் ஒருவருடன் பழகி ஊரைவிட்டு ஓடியது அதிர்ச்சியை ஏற்பட்டுள்ளது.

சென்னை சேர்ந்த 13 வயது மாணவி டிக்டாக் செயலியால் இளைஞர் ஒருவருடன் பழகி ஊரைவிட்டு ஓடியது அதிர்ச்சியை ஏற்பட்டுள்ளது.

சென்னை அரும்பாக்கத்தில் சிவசுப்ரமணியம் கோவில் தெரு பகுதியில் வசித்து வந்த 13 வயது மாணவி 9-ம் வகுப்பு முடித்துள்ளார். தந்தையை இழந்த இவர் தாய் மற்றும் தங்கையுடன் வசித்து வந்தார். கடந்த 30 ஆம் தேதி மாலையில் கடைக்கு சென்று விட்டு வருவதாக கூறிச்சென்ற மாணவி பின்னர் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இந்த நிலையில் மாணவி நேற்று மாலை வாலிபர் ஒருவருடன் வீட்டுக்கு வந்தார். இதுபற்றி ஆயிரம் விளக்கு காவல் நிலையத்தில் மாணவியின் தாய் புகார் அளித்தார். போலீசார் விரைந்து சென்று விசாரணை நடத்தினர். அப்போது அரக்கோணத்தை சேர்ந்த அசாருதீன் என்ற வாலிபர்தான் மாணவியை ஏமாற்றி காதலில் விழவைத்து அழைத்துச் சென்றது தெரிய வந்தது.

வடபழனியில் உள்ள வணிக வளாகம் ஒன்றில் வைத்துதான் அசாருதீன் மாணவியை முதன் முதலில் பார்த்துள்ளார். பின்னர் டிக்-டாக் செயலி வீடியோ மூலம் மாணவி காதலில் விழுந்துள்ளார். இதன் பின்னர் இருவரும் அடிக்கடி சந்தித்து பேசி வந்துள்ளனர். இந்த நிலையில் தான் மாயமான மாணவியை அசாருதீன், அரக்கோணத்துக்கு அழைத்துச் சென்றுள்ளார். பின்னர் 10 நாட்களுக்கு பிறகு இருவரும் சென்னை வந்துள்ளனர். மாணவிக்கு 13 வயதே ஆவதால், அசாருதீன் மீது ‘போக்சோ’ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.