டிக் டாக்கிற்காக ‘ உறைய வைக்கும் நீரில்’ உயிருடன் விளையாடும் நபர் : வைரல் வீடியோ !
டிக் டாக் என்பது தற்போது அனைவரும் பயன்படுத்தும் ஒன்றாக மாறி விட்டது. சிலருக்கு டிக் டாக் பண்ணாமல் தூக்கம் வருவதே இல்லை.
டிக் டாக் என்பது தற்போது அனைவரும் பயன்படுத்தும் ஒன்றாக மாறி விட்டது. சிலருக்கு டிக் டாக் பண்ணாமல் தூக்கம் வருவதே இல்லை. காட்டில், ரோட்டில், வீட்டில் என எங்கே பார்த்தலும் டிக் டாக் தான். குறிப்பாக, டிக் டாக்கில் போடுவதற்காக டிக் டாக் வாசிகள் தங்கள் உயிரைக் கூட பணயம் வைக்கத் தயங்குவதில்லை.
இந்நிலையில் வெளிநாட்டைச் சேர்ந்த நபர் ஒருவர், குளிரால் உறைந்து பனிக்கட்டியாக மாறியுள்ள நீரின் அடியில் நீரில் நீந்திச் செல்கிறார். மிகவும் குளிர்ந்த நீரில் கை, கால் நினைப்பதே பெரும் கஷ்டமாக இருக்கும் நிலையில், அவர் அதிலேயே நீந்திச் செல்வது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவர் வெளியே வந்ததும் அவர் உடல் முழுவதும், சிவந்து போய் காணப் படுகிறது.
இதனை ஒருவர் அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதற்கு நெட்டிசன்கள், ‘ பரவாயில்லை நீங்கள் இன்னும் உயிரோடு தான் இருக்கிறீர்கள், நிரைய பேர் இப்படி தான் உயிரிழந்துள்ளனர், இனிமே இப்படி பண்ணாதீங்க ” என்றெல்லாம் கமெண்ட் செய்து வருகின்றனர். இந்த வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது.