டாஸ்மாக் நேரம் குறைப்பு; தமிழக அரசு பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு

 

டாஸ்மாக் நேரம் குறைப்பு; தமிழக அரசு பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு

டாஸ்மாக் விற்பனை நேரத்தை மாற்றியமைக்க கோரி உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது

சென்னை: டாஸ்மாக் விற்பனை நேரத்தை மாற்றியமைக்க கோரி உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் டாஸ்மாக் நிறுவனம் மூலம் அரசே மதுபான கடைகளை நடத்தி வருகிறது. டாஸ்மாக் கடைகள் காலை 10 மணிக்கு திறக்கப்பட்டு வந்தது. பின்னர், சில்லறை விற்பனை மதுக்கடைகள் மற்றும் அவற்றுடன் இணைந்த பார்கள் காலையில் 2 மணி நேரம் குறைக்கப்பட்டது.

அதன்படி, தற்போது நண்பகல் 12 மணி முதல் இரவு 10 மணி வரை மதுக்கடைகள் செயல்பட்டு வருகின்றன. இந்நிலையில், அரசு மதுக்கடைகளில் மது விற்பனையை 6 மணி நேரமாக குறைக்கக் கோரி உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இந்த மனு மீது விசாரணை நடத்திய நீதிமன்றம், தமிழக அரசின் நிலைப்பாடு குறித்து பதில் அளிக்க உத்தரவிட்டுள்ளது. மேலும், இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், மதுவால் ஒரு தலைமுறையே அழிந்துவிட்டதாக கருத்து தெரிவித்துள்ளனர்.