டாஸ்மாக் திறப்பால் குடும்ப வன்முறை அதிகரிக்கும்! – கனிமொழி எச்சரிக்கை

 

டாஸ்மாக் திறப்பால் குடும்ப வன்முறை அதிகரிக்கும்! – கனிமொழி எச்சரிக்கை

டாஸ்மாக் கடைகளைத் திறப்பதால் குடும்ப வன்முறை அதிகரிக்கும் அபாயம் உள்ளது. எனவே, டாஸ்மாக்கை திறக்கும் முடிவை தமிழக அரசு திரும்பப் பெற வேண்டும் என்று தி.மு.க எம்.பி கனிமொழி கூறியுள்ளார்.

டாஸ்மாக் கடைகளைத் திறப்பதால் குடும்ப வன்முறை அதிகரிக்கும் அபாயம் உள்ளது. எனவே, டாஸ்மாக்கை திறக்கும் முடிவை தமிழக அரசு திரும்பப் பெற வேண்டும் என்று தி.மு.க எம்.பி கனிமொழி கூறியுள்ளார்.

crowd-gathered

கனிமொழி இன்று வெளியிட்டுள்ள ட்வீட் பதிவில், “மத்திய அரசிடமிருந்து  வரவேண்டிய நிதியை வாங்காமல் டாஸ்மாக் கடைகளைத் திறக்க நினைக்கும் தமிழக அரசு, வாழ்வாதாரமின்றி வாடும் மக்களிடம் இருந்து  வருவாயைப் பெற்றுக் கொள்ள நினைக்கிறது. கொரோனா பரவல் அதிகரித்துவரும் நிலையில், அரசின் இம்முடிவு நிச்சயம் ஆபத்தை விளைவிக்கும்.
மேலும், தற்போதைய சூழலில் டாஸ்மாக்கை திறப்பதால் குடும்ப வன்முறை அதிகரிக்கும் அபாயத்தையும் அரசு உணராமல் இருக்கிறது. எனவே, டாஸ்மாக்கை திறக்கும் முடிவை அரசு திரும்பப்பெற வேண்டும்” என்று கூறியுள்ளார்.