“டாடி, நீயே எனக்கு ஆசான்”-ஏ.ஆர்.ரகுமானுக்கு அவரது மகனின் நெகிழ்ச்சிகரமான வாழ்த்து!
கோலிவுட் முதல் ஹாலிவுட் வரை தன் இசையால் ரசிகர்களை கட்டி போட்டுள்ளவர் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான். இசைப்புயல், ஆஸ்கர் நாயகன் என்று அனைவராலும் அன்போடு அழைக்கப்படும் ஏ.ஆர்.ரஹ்மான் இன்று தனது 52வது பிறந்தநாளை கொண்டாடுகிறார்
கோலிவுட் முதல் ஹாலிவுட் வரை தன் இசையால் ரசிகர்களை கட்டி போட்டுள்ளவர் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான். இசைப்புயல், ஆஸ்கர் நாயகன் என்று அனைவராலும் அன்போடு அழைக்கப்படும் ஏ.ஆர்.ரஹ்மான் இன்று தனது 52வது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.
விருதுகளும் பாராட்டுக்களும்:
உலகின் செல்வாக்கு மிகுந்தவர்கள் பட்டியலில் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு எப்போதும் தனி இடமுண்டு. ஒரே ஆண்டில் இரண்டு ஆஸ்கர் விருதுகள் பெற்ற ஆசியாவைச் சேர்ந்த ஒரே நபராக ரஹ்மான் உள்ளார்.
இதுவரை ரஹ்மான், 4 தேசிய விருதுகள், 15 ஃபிலிம் ஃபேர் விருதுகள், 14 தென் ஃபிலிம் ஃபேர் விருதுகள் பெற்றுள்ள ரஹ்மான் விருது விழாக்களில் சிறந்த இசையமைப்புக்காக இதுவரையில் 138 முறைகள் நாமினேட் செய்யப்பட்டு அதில் 117 முறை விருதுகளைத் தட்டிச் சென்றுள்ளார்.
கனடாவின் ஒண்டாரியோ என்னும் பகுதியில் ரஹ்மான் பெயரை ஒரு சாலைக்கு வைத்து ரஹ்மானுக்கு அந்நாடு கவுரவம் செய்துள்ளது .கடந்த 2012-ம் ஆண்டு அமெரிக்க ஜனாதிபதியின் வெள்ளை மாளிகையிலிருந்து ரஹ்மானுக்கு கிறிஸ்துமஸ் வாழ்த்துக் கடிதத்துடன் விருந்து அழைப்பும் கொடுக்கப்பட்டது.
Dear daddy, on your birthday, I want you to know that you are truly an inspiration, a friend and a teacher to all of us. pic.twitter.com/WghyxHuPby
— A.R.Ameen (@arrameen) January 6, 2019
இந்நிலையில் ஏ.ஆர் ரகுமானின் பிறந்தநாளையொட்டி அவரது ரசிகர்கள் அவருக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறிவருகின்றனர். இதன் தொடர்ச்சியாக,ஏ.ஆர்.ரஹ்மானின் மகன் ஏ.ஆர்.அமீன் தனது தந்தைக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார், அதில் “அன்புள்ள தந்தையே.. உங்கள் பிறந்த நாளில் நான் ஒன்றை கூற விரும்புகிறேன். நீங்கள்தான் என்னுடைய உண்மையான நண்பர்,ஆசிரியர் மற்றும் என் தூண்டும் அனைத்தூமாக இருக்கிறீர்கள் என்று கூறியுள்ளார்“
மேலும் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்த ‘ஓகே கண்மணி‘, சச்சின், மற்றும் சமீபத்தில் வெளியான ‘2.0’ ஆகிய படங்களில் ஏ.ஆர்.அமீன் ஒருசில பாடல்களை பாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.