டாடா மோட்டார்ஸ் வாகனங்களுக்கு வாரண்டி மற்றும் இலவச சர்வீஸ் ஜூலை மாதம் வரை நீட்டிப்பு

 

டாடா மோட்டார்ஸ் வாகனங்களுக்கு வாரண்டி மற்றும் இலவச சர்வீஸ் ஜூலை மாதம் வரை நீட்டிப்பு

டாடா மோட்டார்ஸ் வாகனங்களுக்கு வாரண்டி மற்றும் இலவச சர்வீஸ் ஜூலை மாதம் வரை நீட்டிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

டெல்லி: டாடா மோட்டார்ஸ் வாகனங்களுக்கு வாரண்டி மற்றும் இலவச சர்வீஸ் ஜூலை மாதம் வரை நீட்டிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் நடவடிக்கையாக ஏப்ரல் 14-ஆம் தேதி வரை ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த காலகட்டத்தில் பல வாகனங்களின் வாரண்டி மற்றும் இலவச சர்வீஸ் முடிவடைய வாய்ப்புள்ளது. அதனால் அதை தவிர்க்கும் பொருட்டு டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தனது வாடிக்கையாளர்களின் வாகனங்களுக்கு வாரண்டி மற்றும் இலவச சர்வீஸ் சேவையை ஜூலை 31-ஆம் தேதி வரை நீட்டித்து அறிவித்துள்ளது.

ttn

அதாவது மார்ச் 15 முதல் மே 31 வரையிலான காலகட்டத்தில் வாரண்டி மற்றும் இலவச சர்வீஸ் முடிவடையும் வாகனங்களுக்கு மட்டும் இந்த சலுகை பொருந்தும் என்று டாடா மோட்டார்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.