ஞானம் பெறுவதை தடுப்பது எது?

 

ஞானம் பெறுவதை தடுப்பது எது?

சீடர்களுக்கு வகுப்பெடுத்துக் கொண்டிருந்தார் அந்த குரு. வகுப்பு முடிந்ததும் சீடர்கள் குருவிடம் கேள்வி கேட்கலானார்கள். குருவே தாங்கள் ஞானமடைந்தது எப்படி? என்றான் சீடன் ஒருவன். தான் ஞானம் பெற்றதுக்குக் காரணம் ஒரு நாய் தான் என்றார் குரு. 

சீடர்களுக்கு வகுப்பெடுத்துக் கொண்டிருந்தார் அந்த குரு. வகுப்பு முடிந்ததும் சீடர்கள் குருவிடம் கேள்வி கேட்கலானார்கள். குருவே தாங்கள் ஞானமடைந்தது எப்படி? என்றான் சீடன் ஒருவன். தான் ஞானம் பெற்றதுக்குக் காரணம் ஒரு நாய் தான் என்றார் குரு. 
எவ்வாறு? என்று சீடர்கள் ஆவலுடன் வினவினார்கள். 

sedat and guru

ஒரு நாள் குளக்கரை அருகே அமர்ந்திருந்தேன். ஒரு நாய் தாகத்துடன் நீர் அருந்த வந்தது. வேகமாய் நீர் குடிக்கச் சென்ற நாய் குரைத்துக் கொண்டே சட்டெனப் பின் வாங்கியது. சிறிது நேரம் இவ்வாறே திரும்பத் திரும்ப செய்து கொண்டிருந்த நாய், தாகம் அதிகரித்தவுடன் துணிச்சலுடன் தண்ணீரில் வாய் வைத்துக் குடிக்க ஆரம்பித்தது. அப்போது தான் அது உணர்ந்தது, இதுவரை தண்ணீரில் தெரிந்தது தன் பிம்பம் தான் என்று. அதுவரை நாய் தயங்கியதற்குக் காரணம் அதன் உருவமே. இதனால் ஞானத்தைத் தேடி அலைந்து கொண்டிருந்த எனக்கும் விளக்கம் கிடைத்தது. நான் ஞானம் அடையத் தடையாய் இருப்பது, ‘நான்’ தான் என்பதை உணர்ந்தேன். அந்த ‘நான்’ என்ற அகந்தையை ஒழித்த போது தான் ஞானத்தை உணர்ந்தேன் என்றார் குரு.