ஜோதிகாவுக்கு ஆதரவு தெரிவித்தேனா ? விஜய் சேதுபதி டிவிட்டரில் விளக்கம்!

 

ஜோதிகாவுக்கு ஆதரவு தெரிவித்தேனா ? விஜய் சேதுபதி டிவிட்டரில் விளக்கம்!

பணத்தை பள்ளிகளுக்கும், மருத்துவமனைகளுக்கும் கொடுங்கள் என்று கூறினார்.  ஜோதிகாவின் இந்த பேச்சுக்கு சிலர் ஆதரவும் சிலர் எதிர்ப்பும் தெரிவித்தனர். 

சமீபத்தில் பெண்களுக்கான விருது வழங்கும் விழாவில் நடிகை ஜோதிகாவுக்கு சிறந்த நடிகைக்கான விருது வழங்கப்பட்டது.  நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய நடிகை ஜோதிகா, சமீபத்தில் தஞ்சாவூர் சென்றிருந்தேன். அங்குள்ள அரசு மருத்துவமனைகளை பார்த்த போது வெளியில் சொல்ல முடியாத அளவிற்கு கொடுமையாக இருந்தது. ஆனால் அங்கு பிரசித்தி பெற்ற தஞ்சை பிரகதீஸ்வரர் கோயில் சுத்தமாக இருக்கிறது. கோயில்களுக்கு கொட்டிக்கொடுக்கும் பணத்தை பள்ளிகளுக்கும், மருத்துவமனைகளுக்கும் கொடுங்கள் என்று கூறினார்.  ஜோதிகாவின் இந்த பேச்சுக்கு சிலர் ஆதரவும் சிலர் எதிர்ப்பும் தெரிவித்தனர். 

r

இதைத்தொடர்ந்து ஜோதிகாவுக்கு ஆதரவாக விஜய் சேதுபதி கருத்து தெரிவித்ததாக கூறி நேற்று முதல் ட்வீட் ஒன்று உலா வருகிறது. அதில் , ஜோதிகா அவர்களின் துணிவான பேச்சுக்கு வாழ்த்துக்கள். அவர்களுக்கு எதாவது பிரச்சனை என்றால் சக நடிகனாக முதல் ஆளாக இருப்பேன். கோவில்கள் மருத்துவமனையாக மாறும் காலம் நெருங்கிவிட்டது என  குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்நிலையில் நடிகர் விஜய் சேதுபதி தனது டிவிட்டர் பக்கத்தில் மேற்கூறிய ட்வீட்டை பதிவிட்டு   போலியானது என குறிப்பிட்டுள்ளார்.