ஜே.என்.யூ மாணவர்கள் போராட்டத்தில் தீபிகா படுகோன்! 

 

ஜே.என்.யூ மாணவர்கள் போராட்டத்தில் தீபிகா படுகோன்! 

டெல்லி ஜே.என்.யூ மாணவர்கள் போராட்டத்தில் தீபிகா படுகோன் கலந்து கொண்ட புகைப்படம் சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது. 

டெல்லி ஜே.என்.யூ மாணவர்கள் போராட்டத்தில் தீபிகா படுகோன் கலந்து கொண்ட புகைப்படம் சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது. 

டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக் கழகத்தில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) மர்ம நபர்கள் நுழைந்து மாணவர்கள், பேராசிரியர்கள் எனக் கண்ணில் பட்டவர்கள் மீது எல்லாம் தாக்குதல் நடத்தியது. மாணவர் சங்கத் தலைவர் அய்ஷி கோஷை தேடிய அந்த கும்பல், கடைசியில் அவரை கண்டுபிடித்து கொலை வெறி தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதல் சம்பவத்தை பாரதிய ஜனதா கட்சியின் ஏ.பி.வி.பி மாணவர் அமைப்பு செய்திருக்கலாம் என்று சந்தேகம் எழுந்துள்ளது.

deepika padukone

இதற்கிடையில் ஜேஎன்யூ பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் கடுமையாக தாக்கப்பட்டதை தொடர்ந்து நாடு முழுக்க நேற்று முதல் போராட்டம் வெடித்தது. விடிய விடிய மாணவர்கள் சாலைகளில் கூடி போராட்டம் நடத்திவருகின்றனர். இந்நிலையில் டெல்லியில் நடைபெறும் இந்த போராட்டத்தில் ஜே.என்.யூ மாணவர்களுடன் தீபிகா படுகோனும் கலந்து கொண்ட புகைப்படம் சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது.