‘ஜெயஸ்ரீ மேல அபாண்டமா பழி சுமர்த்தி…’ தற்கொலைக்கான காரணத்தை உடைத்த ஜெயஸ்ரீயின் நண்பர்!

 

‘ஜெயஸ்ரீ மேல அபாண்டமா பழி சுமர்த்தி…’ தற்கொலைக்கான காரணத்தை உடைத்த ஜெயஸ்ரீயின் நண்பர்!

மாமியாரும் தன்னை அடித்து துன்புறுத்துவதாகக் கூறி அதிர்ச்சியைக் கிளப்பியுள்ளார்.  

சின்னதிரை நடிகை ஜெயஸ்ரீ தனது கணவரும் நடிகருமான ஈஸ்வர் சின்னதிரை நடிகை மகாலட்சுமியுடன் கணவருக்கு ஏற்பட்ட தகாத உறவால், தன்னிடம் விவாகரத்து கேட்டு கணவனும் மாமியாரும் தன்னை அடித்து துன்புறுத்துவதாகக் கூறி அதிர்ச்சியைக் கிளப்பியுள்ளார்.  இதையடுத்து ஈஸ்வர் கைது செய்யப்பட்டு பின்  ஜாமீனில் வெளிவந்தார். 

ttn

இதையடுத்து நேற்று முன்தினம் ஜெயஸ்ரீ  குடும்ப பிரச்னை மற்றும் மன அழுத்தம் காரணமாகத் தூக்க மாத்திரை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார். அப்போது நடிகையும் தோழியுமான ரேஷ்மாவுக்கு, தனது மகளை பார்த்துக்கொள்ளுமாறு உருக்கமான ஆடியோ பதிவு ஒன்றையும் அனுப்பி பரபரப்பைக் கிளப்பினார். தற்போது ஜெயஸ்ரீ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். 

 

இந்நிலையில் ஜெயஸ்ரீயின் நண்பர் கணேஷ் ராம் பிரபல இணையதள ஊடகம் ஒன்றிற்கு பேட்டியளித்துள்ளார். அதில்,  ‘அவருடைய கணவர் மற்றும் மற்ற பக்கங்களிருந்து ஜெயஸ்ரீக்கு அழுத்தம் கொடுத்துட்டு இருந்தாங்க.  ஜெயஸ்ரீ மேல அபாண்டமா பழி சுமர்த்தி டைவர்ஸ் நோட்டீஸ் அனுப்பிருக்காங்க. காரை வழிமறித்து மிரட்டியிருக்காங்க. பல பக்கங்கள்ல இருந்து பிரச்சனை வந்தா மனசு வீக்காதான போகும். ஒருத்தங்க தன்னை தானே அழிச்சிக்க முடிவு பண்ணியிருக்காங்கன்னா எந்தளவுக்கு அந்த பொண்ணுக்கு பிரச்னையை  கொடுத்து இருப்பாங்கனுக்கு பாருங்க’ என்று கூறியுள்ளார். 

 


 

 முன்னதாக பேசிய பிக் பாஸ் ரேஷ்மா, ‘ஜெயஸ்ரீ அடிக்கடி என்னை கொலை செய்யப்பார்க்கிறார்கள். எனக்கு மனநிலை சரி இல்லை என்று  கூறிவந்தார் என்று தெரிவித்துள்ளது’  குறிப்பிடத்தக்கது.