ஜெயஸ்ரீயை கொடூரமாக கொலை செய்த இரு அதிமுக பிரமுகர்களும் கட்சியிலிருந்து நீக்கம்!

 

ஜெயஸ்ரீயை கொடூரமாக கொலை செய்த இரு அதிமுக பிரமுகர்களும் கட்சியிலிருந்து நீக்கம்!

 

சிறுமி ஜெயஸ்ரீ

அந்த சிறுமியை உடனடியாக மீட்டு முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். ஆனால் அவர் அங்கு அவருக்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். விசாரணையில் ஜெயஸ்ரீ குடும்பத்திற்கும் அதிமுக முன்னாள் கவுன்சிலர் முருகன், கலியபெருமாள் இருவருக்கும் ஏற்கனவே முன்பகை இருந்ததாகவும், இருவரும் ஜெயஸ்ரீ வீட்டில் தனியாக இருந்த ஜெயஸ்ரீயை பெட்ரோல் ஊற்றி கொளுத்தியது தெரியவந்துள்ளது. 

அறிக்கை

இந்நிலையில் அதிமுகவின் அடிப்படை உறுப்பினர் உட்பட அனைத்து பொறுப்புகளிலிருந்தும் இருவரும் நீக்கப்பட்டிருப்பதாக ஓபிஎஸ் மற்றும் ஈபிஎஸ் கூட்டாக அறிக்கை வெளியிட்டுள்ளனர். அதில், “கழகத்தின் கொள்கை- குறிகோள்களுக்கும் கோட்பாடுகளுக்கும் முரணான வகையில் செயல்பட்டதாலும், கழகத்தின் கண்ணியத்திற்கு மாசு ஏற்படும் வகையில் நடந்து கொண்டதாலும், கழகக் கட்டுப்பாட்டை மீறி கழகத்திற்கு களங்கமும் அவப்பெயரும் உண்டாகும் விதத்தில் செயல்பட்ட காரணத்தினாலும், விழுப்புரம் தெற்கு மாவட்டம் திருவெண்ணெய்நல்லூர் ஒன்றியத்தை சேர்ந்த கலியபெருமாள், முருகன் ஆகியோர் இன்று முதல் கழகத்தின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உட்பட அனைத்து பொறுப்புகளிலிருந்தும் நீக்கி வைக்கப்படுகிறார்கள்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.