ஜெயலலிதா மரணத்துக்கும், கொடநாடு கொலைக்கும் சம்பந்தம் இருக்கிறது: கனிமொழி

 

ஜெயலலிதா மரணத்துக்கும், கொடநாடு கொலைக்கும் சம்பந்தம் இருக்கிறது: கனிமொழி

ஜெயலலிதா மரணத்துக்கும் கொடநாட்டில் நடந்த கொலை, கொள்ளைக்கும் தொடர்பு இருக்கிறது என மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி கூறியுள்ளார்.

தூத்துக்குடி: ஜெயலலிதா மரணத்துக்கும் கொடநாட்டில் நடந்த கொலை, கொள்ளைக்கும் தொடர்பு இருக்கிறது என மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி கூறியுள்ளார்.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி தனியார் மண்டபத்தில் திமுக வாக்குசாவடி முகவர்கள் ஆலோசனை கூட்டம் நேற்று நடைபெற்றது. கூட்டத்தில் பங்கேற்ற அக்கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி பேசுகையில், ஜெயலலிதா உயிருடன் இருந்தபோதே கொடநாட்டில் இருந்த ஆவணங்கள், பொருட்களை திருடுவதற்காக கொள்ளை முயற்சி நடந்தது. கொடநாட்டில் நடந்த 5 கொலைகளுக்கும், திருட்டுக்கும், ஜெயலலிதாவின் மரணத்துக்கும் தொடர்பு இருக்கிறது.

இது மக்களிடம் போய் சேர்ந்து விடக்கூடாது என்பதற்காக அதிமுக அரசு அனைத்து ஊடகங்களையும் மிரட்டி வருகிறது. இதனை நாம் மக்களிடம் கொண்டு போய் சேர்க்க வேண்டும். வருகிற நாடாளுமன்ற தேர்தல் மற்றும் இடைத்தேர்தலுக்கு இப்போது இருந்தே பிரசாரத்தை தொடங்க வேண்டும் என்றார்.