ஜெயலலிதா மரணத்தில் உண்மை தெரிய சிபிஐ விசாரணை வேண்டும்: மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்

 

ஜெயலலிதா மரணத்தில் உண்மை தெரிய சிபிஐ விசாரணை வேண்டும்: மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணத்தில் உண்மை தெரிய சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

சென்னை: முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணத்தில் உண்மை தெரிய சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், ஜெயலலிதா மரணத்தில் மர்மங்கள் இருப்பது உண்மை. இதுகுறித்து சிபிஐ விசாரணை நடத்தினால்தான் மக்களுக்கு உண்மைதெரியவரும். ஆறுமுகசாமி ஆணையத்தில் உண்மை வெளிவருவதற்கான வாய்ப்பு இல்லை. ஜெயலலிதா மரணத்தில் மர்மங்கள் இருக்கிறது என்று மிகத்தெளிவாக அமைச்சர் சி.வி.சண்முகம் சொல்லியிருக்கிறார். . 

திருவாரூர் தொகுதி இடைத்தேர்தல் குறித்து 4-ந்தேதி யார் விருப்பம் தெரிவித்திருக்கிறார்களோ அவர்களையும், மாவட்ட நிர்வாகிகளையும் அழைத்து பேசி அன்று மாலையில் யார் வேட்பாளர் என்பதை அறிவிக்க இருக்கிறோம். வெற்றி பெறக்கூடிய அளவிற்கு எங்களுடைய வியூகம் அமையும் என்றார்.