ஜெயலலிதா நினைவிடத்தில் டிடிவி தினகரன் அஞ்சலி

 

ஜெயலலிதா நினைவிடத்தில் டிடிவி தினகரன் அஞ்சலி

ஜெயலலிதாவின் இரண்டாமாண்டு நினைவு தினத்தை முன்னிட்டு அவரது நினைவிடத்தில் அமமுக துணை பொதுச்செயலாளர் மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்.

சென்னை: ஜெயலலிதாவின் இரண்டாமாண்டு நினைவு தினத்தை முன்னிட்டு அவரது நினைவிடத்தில் அமமுக துணை பொதுச்செயலாளர் மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்.

மறைந்த முன்னாள் முதல்வரும், அதிமுகவின் பொதுச்செயலாளராக இருந்தவருமான ஜெயலலிதாவின் இரண்டாமாண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதனால் தமிழகமெங்கும் அதிமுக தொண்டர்கள் அவருக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர். முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓபிஎஸ், அமைச்சர்கள், எம்.எல்.ஏக்கள் மெரினாவில் இருக்கும் அவரது நினைவிடத்திற்கு அமைதி ஊர்வலமாக சென்று மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.

இந்நிலையில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் துணை பொதுச்செயலாளரும், ஆர்.கே.நகர் எம்.எல்.ஏவுமான டிடிவி தினகரன் தனது கட்சியை சேர்ந்தவர்களுடன் அண்ணா சாலையில் இருந்து ஜெயலலிதாவின் நினைவிடத்திற்கு அமைதி ஊர்வலம் சென்றார். அங்கு அவர் ஜெயலலிதாவின் நினைவிடத்தில் மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்.

இதனையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், நாளை நடைபெற இருக்கும் சட்டமன்ற சிறப்பு கூட்டத்தில் நான் கலந்து கொள்ள இருக்கிறேன். மேகதாது விவகாரத்தில் தீர்மானம் நிறைவேற்றுவது அவசியமான ஒன்று என்றார்.