ஜெயலலிதாவுக்குப் பிறகு தைரியமான தலைவர் ராஜேந்திர பாலாஜிதான்… பா.ஜ.க-வில் சேர்ந்த பேரரசு சொல்கிறார்!
ஜெயலலிதாவுக்குப் பிறகு மிகவும் தைரியமான தலைவராக அமைச்சர் ராஜேந்திர பாலாஜி உள்ளார் என்று சமீபத்தில் பாரதிய ஜனதா கட்சியில் தன்னை இணைத்துக்கொண்ட இயக்குநர் பேரரசு கூறியுள்ளார்.
தொடர்ந்து சர்ச்சைக்குரிய கருத்துக்களை கூறி வருபவர் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி. சமீபத்தில் தனியார் தொலைக்காட்சிக்கு அவர் அளித்திருந்த பேட்டி அதிர்ச்சி ரகம்.
ஜெயலலிதாவுக்குப் பிறகு மிகவும் தைரியமான தலைவராக அமைச்சர் ராஜேந்திர பாலாஜி உள்ளார் என்று சமீபத்தில் பாரதிய ஜனதா கட்சியில் தன்னை இணைத்துக்கொண்ட இயக்குநர் பேரரசு கூறியுள்ளார்.
தொடர்ந்து சர்ச்சைக்குரிய கருத்துக்களை கூறி வருபவர் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி. சமீபத்தில் தனியார் தொலைக்காட்சிக்கு அவர் அளித்திருந்த பேட்டி அதிர்ச்சி ரகம்… அந்த வீடியோவை சுட்டிக்காட்டி அவரை அமைச்சர் பதவியிலிருந்து நீக்க வேண்டும் என்று மு.க.ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டிருந்தார்.
இந்த நிலையில், சமீபத்தில் பா.ஜ.க-வில் ஐக்கியமான இயக்குநர் பேரரசு ஸ்டாலினுக்கு கண்டனம் தெரிவித்து ட்வீட் வெளியிட்டுள்ளார். அதில், “அதிமுகவில் ஜெயலலிதாவுக்கு பிறகு துணிச்சலான ஆளு அமைச்சர் ராஜேந்திர பாலாஜிதான்!
அதிமுகவில் ஜெயலலிதாவுக்கு பிறகு துணிச்சலான ஆளு அமைச்சர் ராஜேந்திர பாலாஜிதான்!
இந்துவாய் இருந்துகொண்டு
இந்து மதத்தை இழிவாய் பேசி பிற மதத்தை ஆதரிப்பது சரியாம்,
ஒரு இந்து ,இந்து மதத்தை ஆதரித்து பேசினால்
அவர் பதவியை பறிக்கனுமாம்!
நல்ல மதசார்பின்மை!!! pic.twitter.com/23MOzmwlJ2— PERARASU ARASU (@ARASUPERARASU) February 3, 2020
இந்துவாய் இருந்துகொண்டு இந்து மதத்தை இழிவாய் பேசி பிற மதத்தை ஆதரிப்பது சரியாம், ஒரு இந்து ,இந்து மதத்தை ஆதரித்து பேசினால் அவர் பதவியை பறிக்கனுமாம்! நல்ல மதசார்பின்மை!!!” என்று குறிப்பிட்டுள்ளார்.