ஜெயலலிதாவின் நேரடி வாரிசு தீபாவால் அரசியலுக்கு வரத் தயங்கும் ரஜினி… தாறுமாறு பின்னணி..!

 

ஜெயலலிதாவின் நேரடி வாரிசு தீபாவால் அரசியலுக்கு வரத் தயங்கும் ரஜினி…  தாறுமாறு பின்னணி..!

ஜெயலலிதா நேரடி வாரிசு தீபாவே அரசியலை விட்டு பின்னங்கால் பிடரியில் பட ஓடி ‘ஜகா’ வாங்கிட்டாங்க. நான் ஏன் அவசரப்படணும்?

தர்பார்’ படப்பிடிப்பு முடிந்தவுடன் அரசியலில் இறங்கி தாறுமாறு காட்டுவார் என எதிர்பார்த்தால் அடுத்த படத்திற்கு தயாராகி வருகிறார் ரஜினி. படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில் ஓய்வெடுப்பதற்காக ரஜினி இமயமலைக்கு பயணம் செல்லவிருப்பதாகவும் அங்கு அடுத்த பட ஷூட்டிங் தொடங்கும்வரை ஓய்வெடுக்க இருப்பதாகவும் தகவல்கள் நடமாடுகின்றன.

rajini

காவல்துறை பின்னணியில் ஏ.ஆர்.முருகதாஸ், ரஜினி, நயன்தாரா கூட்டணியில் உருவாகிவரும் ‘தர்பார்’ படத்தின் படப்பிடிப்பு முடிந்து விட்டது. சமீபத்தில் இந்தப் படத்தில் இடம்பெறும் ரஜினியின் லுக்கை வெளியிட்டுள்ளார் இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ்.

படக்குழு வெளியிட்டுள்ள தர்பார் பட போட்டோக்களில் ரஜினியின் ஸ்டைலைப் பார்த்து செம மகிழ்ச்சியில் இருக்கிறார்கள் ரசிகர்கள். படக்குழுவுக்கு தெரியாமல், அடிக்கடி சில கறுப்பு ஆடுகள் தர்பார் படப்பிடிப்பு புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டு வருகின்றன.

Rajini

இதனிடையே சூர்யாவின் ‘காப்பான்’ இசை வெளியீட்டு விழாவில் கலந்துக்கொண்ட ரஜினி, ‘‘தர்பார் மாதிரி இன்னொரு படம் எனக்கு அமைந்துவிடக் கூடாது என்பதுபோல இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் தீயாக வேலை பார்க்கிறார்’ என்று பேசியிருந்தார்.

இந்நிலையில் ரஜினி தனது அடுத்த புதிய படத்தை இறுதிசெய்யும் வேலையில் இறங்கிய ரஜினி அநேகமாக சன் பிக்சர்ஸுக்கு ஒரு படம் பண்ண உள்ளார். சில தினங்களுக்கு முன்  இயக்குநர் சிறுத்தை சிவாவை சந்தித்ததன் மூலம் அதனை உறுதி செய்துவிட்டார் ரஜினி.

இந்தப்படம் தொடங்கும் வரை வீட்டில் ஓய்வெடுத்தால் மீடியாக்களின் அரசியல் கேள்விகளுக்கு பதில் சொல்லவேண்டி வருமே என்ற எண்ணத்தில் அதைத் தவிர்க்கும் பொருட்டு ரஜினி வழக்கம்போல் இமயமலையின் ஏதோ ஒரு ஏரியாவுக்குப் போய் ஓய்வெடுத்துவிட்டுத்தான் திரும்புவார் என்கிறார்கள்.

deepa

ஜெயலலிதா நேரடி வாரிசு தீபாவே அரசியலை விட்டு பின்னங்கால் பிடரியில் பட ஓடி ‘ஜகா’ வாங்கிட்டாங்க. நான் ஏன் அவசரப்படணும்? இன்னும் பத்து படத்தில் நடிச்சிட்டு அப்புறம் பார்த்துக்கலாம்” என்கிற முடிவில் அவர் இருப்பதாக கூறப்படுகிறது.