‘ஜெயம் ரவி’ பட நாயகியின் காதலருக்கு மண்டை உடைப்பு: பீர் பாட்டிலில் அடித்த முன்னாள் காதலர்!

 

‘ஜெயம் ரவி’ பட நாயகியின் காதலருக்கு மண்டை உடைப்பு: பீர் பாட்டிலில் அடித்த முன்னாள் காதலர்!

நடிகை ராகிணி திவேதியிடன் அவரது முன்னாள் காதலர் வாக்குவாதத்தில் ஈடுபட்ட தகராறில் ஆர்டிஓ அதிகாரிக்கு மண்டை உடைந்தது.

பெங்களூரு: நடிகை ராகிணி திவேதியிடன் அவரது முன்னாள் காதலர் வாக்குவாதத்தில் ஈடுபட்ட தகராறில் ஆர்டிஓ அதிகாரிக்கு மண்டை உடைந்தது.

 

தமிழில், ஜெயம் ரவி நடித்த நிமிர்ந்து நில், அறியான் உள்ளிட்ட படங்களில் நடித்தவர் ராகிணி திவேதி. இதை தொடர்ந்து இவர் கன்னடம், மலையாளம், தெலுங்கு படங்களிலும் நடித்திருக்கிறார்.  இவர் தனது ஆண் நண்பரும் ஆர்டிஓ அதிகாரியுமான ரவிஷங்கருடன், இரவு உணவு சாப்பிட, பெங்களூர் ரெசிடன்சி சாலையில் உள்ள ரிட்ஸ் கார்டன் நட்சத்திர ஓட்டலுக்கு நேற்றுமுன் தினம் இரவு சென்றார். 

ragini

அப்போது ராகிணி திவேதியின் முன்னாள் காதலர் சிவபிரகாஷ்  அங்கு வந்தார். அவர் குடிபோதையில், ராகிணியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதனால் இருவருக்குமிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதை கண்ட, ரவிஷங்கர் சண்டையைத் தடுத்து நிறுத்த முற்பட்ட போது, சிவபிரகாஷுக்கும், ரவிஷங்கருக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டது. 

ragini ttn

இந்த சண்டையில் சிவபிரகாஷ், பீர் பாட்டிலை எடுத்து, ரவிஷங்கரின் மண்டையில் அடித்து உடைத்ததால்,  அவர் படுகாயம் அடைந்தார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. உடனடியாக அங்கிருந்து வெளியேறிய நடிகை ராகிணியும் ரவி ஷங்கரும், அசோக்நகர் போலீஸில் புகார் செய்தார். இந்த புகாரின் அடிப்படையில், போலீசார் சிவப்பிரகாஷ் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். நடிகையின் காதலர்கள் பொது இடத்தில் மல்லுக்கட்டி கொண்ட சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.