ஜெட் வேகத்தில் படப்பிடிப்பை முடித்து ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்த சிவகார்த்திகேயன்!

 

ஜெட் வேகத்தில் படப்பிடிப்பை முடித்து ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்த சிவகார்த்திகேயன்!

சிவகார்த்திகேயன் தயாரிப்பில் உருவாகும் வாழ் படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளதாகப் படக்குழு அறிவித்துள்ளது.

சென்னை: சிவகார்த்திகேயன் தயாரிப்பில் உருவாகும் வாழ் படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளதாகப் படக்குழு அறிவித்துள்ளது.

கனா, நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா படங்களின் வரவேற்பைத் தொடர்ந்து சிவகார்த்திகேயன் தயாரிக்கும் மூன்றாவது படம் வாழ். அருவி படத்தின் மூலம் ரசிகர்களின் கவனத்தைப் பெற்ற அருண் பிரபு புருஷோத்தமன் இந்த படத்தை இயக்கிறார். சமீபத்தில் தான் இந்தப் படம் பற்றிய தகவல்கள் வெளியாகின. ஆனால் தற்போது அதற்குள் படப்பிடிப்பை நிறைவு செய்து ஆச்சரியப்படுத்தியுள்ளன 

இது குறித்து அவர்கள் வெளியிட்டுள்ள அந்த போஸ்டரில் ‘100 லோகேஷன்களுக்கு மேல் 75 நாட்களில் மொத்த படப்பிடிப்பையும் நிறைவு செய்துள்ளோம்’. இதை சிவகார்த்திகேயனின் தயாரிப்பு நிறுவனம் ட்விட்டரில் வெளியிட்டுள்ளது .மேலும், படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.  

இந்த அறிவிப்பைக் கேட்ட ரசிகர்கள் ‘ஆனாலும் இவளோ ஸ்பீட் ஆகாது பாஸ்’ என்று நகைச்சுவையாக கமெண்ட் செய்து வருகின்றனர்.