ஜூன், ஜூலையில் உச்சத்தை அடையும் கொரோனா பாதிப்பு! – எய்ம்ஸ் இயக்குநர் எச்சரிக்கை

 

ஜூன், ஜூலையில் உச்சத்தை அடையும் கொரோனா பாதிப்பு! – எய்ம்ஸ் இயக்குநர் எச்சரிக்கை

தற்போதைய தகவல், புள்ளிவிவரங்கள், சூழ்நிலையை வைத்துப் பார்க்கும்போது ஜூன், ஜூலை மாதத்தில் இந்தியாவில் கொரோனாவின் தாக்கம் உச்சத்தில் இருக்கும் என்று டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையின் இயக்குநர் தெரிவித்துள்ளார்.

தற்போதைய தகவல், புள்ளிவிவரங்கள், சூழ்நிலையை வைத்துப் பார்க்கும்போது ஜூன், ஜூலை மாதத்தில் இந்தியாவில் கொரோனாவின் தாக்கம் உச்சத்தில் இருக்கும் என்று டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையின் இயக்குநர் தெரிவித்துள்ளார்.

corona-in-tamilnadu-02

டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை இயக்குநர் ரந்தீப் குலேரியா அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது:
“நமக்குக் கிடைத்துக் கொண்டிருக்கும் புள்ளிவிவரங்கள், தகவல் அடிப்படையில் இந்தியாவில் கொரோனா பாதிப்பு அதிகரித்துக்கொண்டே செல்வது தெரிகிறது. இதன் உச்சம் என்பது ஜூன் அல்லது ஜூலையில்தான் இருக்கும். இருப்பினும் கொரோனாவில் பல்வேறு வகைகள் உள்ளன. இவை எந்த அளவுக்கு தீவிரமானவை, ஊரடங்கு நீட்டிப்பின் பலன் சாதகமாக அமைந்ததா என்பதை காலம்தான் சொல்ல வேண்டும்” என்றார்.