ஜியோவின் அடுத்த அதிரடி: ரூ.297 விலையில் புது ஆஃபர்!

 

ஜியோவின் அடுத்த அதிரடி: ரூ.297 விலையில் புது ஆஃபர்!

ரிலையன்ஸ் ஜியோவின் அடுத்த அதிரடி சலுகைத் திட்டம் வெளியாகியுள்ளது

சென்னை: ரிலையன்ஸ் ஜியோவின் அடுத்த அதிரடி சலுகைத் திட்டம் வெளியாகியுள்ளது.

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் குறுகிய காலக்கட்டத்தில் அதிக வாடிக்கையாளர்களை பெற்று முன்னணி நிறுவனமாக உள்ளது. அதாவது 28 கோடி வாடிக்கையாளர்களை பெற்றுள்ளது. 

இந்நிலையில், ஜியோ ரூ.297 விலையில் சலுகை ஒன்றை அறிவித்துள்ளது. ஜியோவின் இந்த சலுகையில் பயனர்களுக்கு அன்லிமிட்டெட் வாய்ஸ் கால், தினமும் 500 எம்பி அதிவேக டேட்டா, டேட்டா தீர்ந்ததும் வேகம் 64Kbps ஆக குறைக்கப்படும்.

300 எஸ்எம்எஸ் ஆகியவை 84 நாட்களுக்கு வழங்கப்படுகிறது. மேலும், ஜியோ செயலிகளை இலவசமாக பயன்படுத்தும் வசதி உள்ளிட்டவை வழங்கப்படுகிறது. 

இதனோடு ஜியோ செயலியின் மூலம் ரீசார்ஜ் செய்யும் போது ரூ.50 மதிப்புள்ள வவுச்சரை பயன்படுத்தி சலுகை பெறலாம்.