ஜம்மு – காஷ்மீரில் சொந்த நிலம்! தங்கும் விடுதிகள்!’ – பாஜக அரசு புதிய வியூகம்!

 

ஜம்மு – காஷ்மீரில் சொந்த நிலம்! தங்கும் விடுதிகள்!’ – பாஜக அரசு புதிய வியூகம்!

இத்தனை வருடங்களாக, காஷ்மீர் மக்களைத் தவிர நாட்டின் பிற மாநிலத்தவர் அங்கு சொத்துகள் வாங்க முடியாது என்ற நிலை இருந்து வந்தது. தற்போது,  ஜம்மு – காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்ட நிலையில் யார் வேண்டுமானாலும் அங்கு நிலம் வாங்கலாம் என நிலை உருவாகியுள்ளது.

jammu kashmir

இதற்கு எதிர்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். மகாராஷ்டரா அரசு ஜம்மு – காஷ்மீரில் நிலம் வாங்கவுள்ளதாக சமீபத்தில் செய்திகள் வெளியாகின. இந்நிலையில் தற்போது கர்நாடக அரசு ஜம்முவில் நிலம் வாங்கவுள்ளதாக அம்மாநில சுற்றுலாத்துறை அமைச்சர் ரவி தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் பேசும் போது,  “ஜம்மு – காஷ்மீரில் நிலம் வாங்குவது தொடர்பாக அமைச்சரைவில் முன்மொழிவை வைக்க இருக்கிறோம். சட்டமன்றத்தில் அனுமதி கிடைத்ததும் மத்திய அரசு மற்றும் ஜம்மு – காஷ்மீர் ஆளுநருக்கு கடிதம் மூலம் தெரியப்படுத்துவோம். ஒப்புதல் கிடைத்ததும் இரு யூனியன் பிரதேசங்களிலும் முதலீடு செய்வோம். சுற்றுலா விடுதிகள் அங்கு கட்டப்படும். இந்த முதலீட்டை கர்நாடக மாநில சுற்றுலா மேம்பாட்டுக் கழகத்திடம் ஒப்படைக்கவுள்ளோம்” என்றார்.

ஜம்மு – காஷ்மீர் மாநிலத்தில் முதலீடு செய்ய மற்ற மாநிலங்கள் ஆர்வம் காட்டாத நிலையில் பாஜக அரசு ஆட்சி புரியும் இரண்டு மாநில அரசுகள் தங்களது விருப்பத்தை தெரிவித்துள்ளன.