ஜம்மு-காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்

 

ஜம்மு-காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்

ஜம்மு-காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

புல்வாமா: ஜம்மு-காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

ஜம்மு-காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் இன்று பாதுகாப்பு படையினருடன் ஏற்பட்ட மோதலில் அடையாளம் தெரியாத இரண்டு பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.

தெற்கு காஷ்மீர் மாவட்டத்தின் டேங்கர்போராவில் இன்று அதிகாலையில் பாதுகாப்புப் படையினர் சுற்றி வளைத்து தேடுதல் நடவடிக்கையை மேற்கொண்டனர். பாதுகாப்பு படைகள் அப்பகுதியில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டபோது, பயங்கரவாதிகள் அவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதையடுத்து பாதுகாப்பு படையினர் பதில் தாக்குதல் நடத்தினர்.

இந்த துப்பாக்கிச் சண்டையில் இரண்டு பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர் என்று அதிகாரி ஒருவர் கூறினார். கொல்லப்பட்ட பயங்கரவாதிகளின் அடையாளம் மற்றும் அவர்களின் குழு தொடர்பு குறித்து உறுதி செய்யப்பட்டு வருவதாக அந்த அதிகாரி தெரிவித்தார். மேலும் தேடுதல் நடவடிக்கை தொடர்ந்து நடைபெற்று வருகிறது என்றார்.