ஜப்பானில் சடலங்களுடன் கரை ஒதுங்கிய பேய் படகு! அதிர்ச்சியில் மீனவர்கள்!!

 

ஜப்பானில் சடலங்களுடன் கரை ஒதுங்கிய பேய் படகு! அதிர்ச்சியில் மீனவர்கள்!!

ஜப்பானிலுள்ள ஒரு தீவில் மர்மப் படகு ஒன்று கரையொதுங்கியது குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்திவருகின்றனர்.

சாடோ தீவு அருகே  மர்மப் படகு ஒன்று பாதி உடைந்த நிலையில் கரை ஒதுங்கியது. இதனைப்பார்த்த அப்பகுதி மீனவர்கள், உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் அளித்தனர். தகவலறிந்து விரைந்து சென்ற அதிகாரிகள் படகை சோதனை செய்தனர். அப்போது அந்த மர்மப் படகில் 7 சடலங்கள் சிதைந்த நிலையில் இருந்துள்ளன. சடலங்களை பிரேத பரிசோதனை செய்வதற்காக மருத்துவமனைக்கு அனுப்பிய காவல்துறை அதிகாரிகள், படகு எங்கிருந்து வந்தது அதிலிருந்தவர்கள் உயிரிழக்க காரணம் என்ன என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

பேய் படகு

படகில் கொரிய மொழியில், எண்களும் பெயர்களும் பொறிக்கப்பட்டுள்ளன. படகில் சடலமாக மீட்கப்பட்டவர்கள் கொரிய நாட்டைச் சேர்ந்தவர்களாக இருக்கக்கூடும் எனக் கூறப்படுகிறது. இதேபோன்று இந்த மாத தொடக்கத்தில் மர்மப் படகு ஒன்று கரை ஒதுங்கியதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். 

வறுமையின் காரணமாக கொரிய நாட்டிலிருந்து பிழைப்பைத் தேடி வெளியில்வரும் மக்கள் மோசமான வானிலை காரணமாக அலைகளில் சிக்கி உயிரிழப்பதாகக் கூறப்படுகிறது. ஜப்பான் ஊடகங்கள் இதுபோன்று கரையொதுங்கும் படகுகளை `பேய்ப் படகு’ என்ற அடைமொழியுடன் அழைக்கின்றனர்.