சோம வார பிரதோஷ வழிபாடும் அதன் அபிஷேக பலன்களும்

 

சோம வார பிரதோஷ வழிபாடும் அதன் அபிஷேக பலன்களும்

ஒவ்வொரு பிரதோஷ தினத்தின் பொழுதும் என்னென்ன பொருட்களை கொண்டு அபிஷேகம் செய்தால் என்னென்ன பலன்கள் என்பதை பற்றி விரிவாக பார்போம். 

சிவனை நாம் நாள் தோறும் வணங்கிவந்தாலும் பிரதோஷ காலத்தில் சிவபெருமானை ஆலயம் சென்று வணங்குவது மிக சிறந்த பலன்களை அளிக்கும். மாதந்தோறும் இருமுறை வருகின்ற வளர்பிறை மற்றும் தேய்பிறை திரயோதசி  நாட்கள் பிரதோஷ தினமாக கருதப்படுகிறது. 

abisekam

இந்நாட்களில் மாலை 4.30 மணி முதல் 6.00 மணி வரையிலான நேரம் பிரதோஷ காலமாகும். இந்த நேரத்தில் பரமசிவனை வழிபட்டால் மற்ற நாட்களில் ஏற்படும் துன்பங்கள் நீங்கி இன்பம் பெறலாம் என்பது நம் முன்னோர்களின் நம்பிக்கையாகும்.

aisekamk

அதே போல் சிவபெருமானுக்கு உகந்த பிரதோஷ பூஜையின் போது பயன்படுத்தப்படும் அபிஷேக பொருட்களால் கிடைக்கும் பலன்கள் என்னவென்று கீழே விரிவாக பார்போம்.

1. பால் – நோய் தீரும் நீண்ட ஆயுள் கிடைக்கும்.
2. தயிர் – பல்வேறு வளமும் உண்டாகும்
3. தேன் – இனிய சாரீரம் கிட்டும்
4. பழங்கள் – விளைச்சல் பெருகும்
5. பஞ்சாமிர்தம் – செல்வம் பெருகும்
6. நெய் – முக்தி பேறு கிட்டும்
7. இளநீர் – நல்ல மக்கட் பேறு கிட்டும்
8. சர்க்கரை – எதிர்ப்புகள் மறையும்
9. எண்ணெய் – சுகவாழ்வு
10. சந்தனம் – சிறப்பான சக்திகள் பெறலாம்
11. மலர்கள் – தெய்வ தரிசனம் கிட்டும்

sivantempo

பிரதோஷ வழிபாடும் அதன் பலன்களும்: 

1.ஞாயிறு பிரதோஷம்     – சுப மங்களத்தை தரும்
2.திங்கள் சோம பிரதோஷம் – நல் எண்ணம், நல் அருள் தரும்.
3.செவ்வாய் பிரதோஷம்     – பஞ்சம், வறுமை, பட்டினி அகலும்.
4.புதன் பிரதோஷம்     – நல்ல புத்திரபாக்யம் தரும்
5.வியாழன் பிரதோஷம்    – திருமணத்தடை விலகி மாங்கல்ய பலன் கிட்டும்.
6.வெள்ளி பிரதோஷம்    – எதிரிகள், எதிர்ப்பு விலகும்.
7.சனிப் பிரதோஷம்     – அனைத்து துன்பமும் விலகும்.