சொந்த ஊரில் புதிதாக வீடுகட்டிய ‘சூப்பர் சிங்கர் ஜோடி’ செந்தில் கணேஷ் – ராஜலக்ஷ்மி : வைரல் போட்டோஸ்!

 

சொந்த ஊரில் புதிதாக வீடுகட்டிய ‘சூப்பர் சிங்கர் ஜோடி’  செந்தில் கணேஷ் – ராஜலக்ஷ்மி : வைரல் போட்டோஸ்!

இந்த போட்டி நிகழ்ச்சியில்  நாட்டுப்புறப் பாடல்கள் பாடி ஏராளமான ரசிகர்கள் மனத்தை வென்றார்கள்.

விஜய் தொலைக்காட்சி நிகழ்ச்சி மூலம் பிரபலமடைந்தவர்கள்  ஜோடி செந்தில் கணேஷ் – ராஜலக்ஷ்மி தம்பதி. இவர்கள் கலந்துகொண்ட இந்த போட்டி நிகழ்ச்சியில்  நாட்டுப்புறப் பாடல்கள் பாடி ஏராளமான ரசிகர்கள் மனத்தை வென்றார்கள். இதை தொடர்ந்து படத்தில் பாடும் வாய்ப்பு கிடைத்தது.  மேலும் செந்தில் கணேஷ் ஹீரோவாகவும் ஒரு படத்தில் நடித்து வருகிறார்.இதனால் நாளுக்கு நாள் இந்த தம்பதிகளின் மவுசு எகிறி வருகிறது.

ttn

குறிப்பாக உள்ளூர் மட்டுமல்லாது வெளிநாட்டு நிகழ்ச்சிகளிலும்  இவர்கள் கலந்து கொண்டு பட்டையைக் கிளப்புகின்றனர்.  ஏற்கனவே செந்தில் சூப்பர் சிங்கர் டைட்டில்  வின்னராகி  50 லட்சம் மதிப்புள்ள வீடு மற்றும் ஏ.ஆர்.ரகுமான் இசையில் பாடும் வாய்ப்பையும் பெற்றார். 

ttn

இந்நிலையில் செந்தில் கணேஷ் தனது சொந்த ஊரான புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள களபம் கிராமத்தில் புதிதாக வீடு ஒன்றை கட்டி கிரஹபிரவேசம் செய்துள்ளார்.

இதுகுறித்து தனது  ஃபேஸ்புக் பக்கத்தில், என் #தாய் #தந்தையின் கனவு இல்லம். என் சொந்த ஊரான #களபம் கிராமத்தில் என்று பதிவிட்டுள்ளார். இதைக்கண்ட நெட்டிசன்கள் அவர்களுக்கு தங்கள் பாராட்டுகளைத் தெரிவித்து வருகின்றனர்.