சொகுசு ஹோட்டலில் தங்கி விட்டு பில் கட்டாமல் ஏமாற்றிய பிரபல நடிகை !

 

சொகுசு ஹோட்டலில் தங்கி விட்டு பில் கட்டாமல் ஏமாற்றிய பிரபல நடிகை !

ஹோட்டலில் தங்கியதற்கான பில் தொகையைக் காட்டாமல் போக்கு காட்டி வருவதாக நடிகை பூஜா காந்தி மீது காவல் துறையில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

பெங்களூரு :

ஹோட்டலில் தங்கியதற்கான பில் தொகையைக் காட்டாமல் போக்கு காட்டி வருவதாக நடிகை பூஜா காந்தி மீது காவல் துறையில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

‘கொக்கி’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் கன்னட நடிகை பூஜா காந்தி. இந்தப் படத்தை அடுத்து இவர் தமிழில் சரத்குமாருக்கு ஜோடியாக ‘வைத்தீஸ்வரன்’ என்ற படத்தில் நடித்துள்ளார். தமிழையடுத்து இவர் தெலுங்கு, கன்னடம், மலையாள திரையுலகிலும் பல படங்களில் நடித்துள்ளார். 

பூஜா காந்தி

இந்நிலையில் பூஜா பெங்களூருவில் உள்ள 5 ஸ்டார் ஹோட்டலில் தங்கியிருந்ததாக தெரிகிறது. 2017 ஆம் வருடம் மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் நடந்த படப்பிடிப்பில் கலந்துகொள்ள வந்த பூஜா காந்தி, படக்குழுவினருடன் அந்த ஹோட்டலில் தங்கியிருந்ததாக தெரிகிறது. ஆனால், படப்பிடிப்பு முடிந்த பிறகும் நடிகை பூஜா காந்தியும் அவரது நண்பரும் பாஜக பிரமுகருமான அனில் மேனாசிங்காய் என்பவரும் அங்கு தங்கி வந்துள்ளனர். அதற்கான கட்டணமாக 2018 ஆம் ஆண்டு வரையில் 22,83,129 ரூபாய் கட்டியுள்ளனர். இன்னும் 3.35 லட்சம் ருபாய் நிலுவைத் தொகையாக உள்ள நிலையில் அதைக்கட்டாமல் அவர்கள் ஹோட்டலில் இருந்து  தப்பி விட்டதாக ஹோட்டல் நிர்வாகம் புகார் அளித்துள்ளது.

இதையடுத்து பூஜா ஹோட்டல் நிர்வாகத்திற்கு பாதி பணத்தை செலுத்தியுள்ளார். பட வாய்ப்பு இல்லாததால் மீதி பணத்தை வாய்ப்பு வந்தவுடன் தருகிறேன் என கூறியுள்ளார். இச்சம்பவம் கன்னட திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.