சேது திடீரென மறைந்தது மிக கொடூரமானது! கே.எஸ் அழகிரி இரங்கல்

 

சேது திடீரென மறைந்தது மிக கொடூரமானது! கே.எஸ் அழகிரி இரங்கல்

கண்ணா லட்டு தின்ன ஆசையா மற்றும் வாலிப ராஜா ஆகிய படங்களில் கதாநாயகனாக நடித்த நடிகர் சேது நேற்று இரவு மாரடைப்பால் மரணம் அடைந்தார். சென்னையில் தோல் நோய்  மருத்துவராகவும் திகழ்ந்த இவரின் திடீர் மரணம் திரையுலகை அதிர்ச்சி அடைய செய்துள்ளது.

statement

இந்நிலையில் தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி வெளியிட்டுள்ள அறிக்கையில், “திரைப்படங்கள் சிலவற்றிலும், தொலைக்காட்சியிலும் சிறப்பாக நடித்து அனைவரது வரவேற்பையும், பாராட்டுதலையும் பெற்ற 35 வயது நிரம்பிய மருத்துவர் சேதுராமன் திடீரென மறைந்த செய்தி கேட்டு கடும் அதிர்ச்சியும் துயரமும் அடைந்தேன். சமீபத்தில் கொரோனா வைரஸ் நோய் பாதிப்பு குறித்து மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக ஊடகங்களின் மூலமாக மருத்துவர் என்ற முறையில் தெளிவான பிரச்சாரத்தை மேற்கொண்டவர். ஆனால் தமது இளம் வயதிலேயே மாரடைப்பு காரணமாக திடீரென மறைந்தது மிக கொடூரமானதாகும். அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும், திரைப்பட, மருத்துவ நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பில் தெரிவித்துக் கொள்கிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.